புதன், செப்டம்பர் 30

வாழ்த்துக்கள்,தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு.

ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை நாளை 02.10.2009 தொடங்கபடுகின்றது என்று தோழர் கவிஞர்.செவ்வியன் (தலைவர் ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் சென்னை) மூலமாக அறியபொருகின்றேன்.நீண்ட காலத்திற்க்கு பிறகு இவ்வாறன நிகழ்சி நம் மண்ணில் நடைபெற இருக்கின்றது,என்னிடம் சில நண்பர்கள் எதிர்மறையான மற்றும் எப்பொழுதும் முன்வைக்கும் கருத்துக்களை தெரிவித்தார்கள்,அவர்களுக்கு ஒரே பதில் ஆம்பலாப்பட்டின் தலைமுறை மாற்றத்திற்க்கு முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு நாம் நம்முடைய ஆதரவினை கொடுப்போம் என்றேன்.

இருப்பினும் என்னுடைய கருத்துக்களை என் இடுகளம் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ளவிரும்பொகின்றேன்,இன்று நம்மை சுற்றியுள்ள கிராமங்களுக்குஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்கிகொண்டு இருக்கின்றோம், இம் மாற்றத்தினை ஏற்படுத்திய பொறுமை நம் முன்னோர்களையே சாரும் குறிப்பாக செஞ்சட்டை தோழர்களையே சாரும்.ஏனெனில் ஆம்பல் வரலாற்றில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்று கூறுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே இந்த அறக்கட்டளையை ஒருங்கினைத்தவர்களும்,நிதி அளிப்போர்களும் இயல்பாகவே வரவேற்றிறுப்பார்கள்.என்னைபோல நூற்றுகணக்கான இளைங்ஞர்கள் தரமற்ற கல்வி மற்றும் மொழி பிரச்சனைகளால் அவதிபடுகின்றோம்,நம் மண்ணை பொறுத்தவரை பொருள் தேடல் என்பது இடம்பெயர்ந்தது அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது.வசதிபடைத்தவர்கள் குடிபெயர்ந்தும்,நடுத்தர குடும்பங்கள் நர்சரி பள்ளிகளுக்கும் அனுப்பி போலியான வளர்ச்சிக்கு தயார்படுத்திகொள்கின்றனர். ஒரு சிறு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,நான் கடந்தமுறை விடுமுறையில் சென்றபோது கண்டது, விவசாய குடும்பம்,இரண்டுகுழந்தைகள்,ஆணொன்று,பெண்ணொன்று,தினமும் அதிகாலையில் எழுந்து நீரட செய்து,காலை சிற்றுண்டி மற்றும் அனைத்தும் செய்து காலை மணி 06.45 தயார்படுத்திடுவாள் நர்சரி பள்ளிக்கு அன்னை, ஆனால் பெண்ணோ அதுவாகவே தயார்படுத்திகொண்டு செல்லும் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு,இரண்டு குழந்தகளுக்கும் வயது வித்தியாசம் இரண்டுக்குள்தான் இருக்கும் என்று கருதுகிறேன்,நான் ஒரு நாள் அந்த அன்னையிடம் வினாவினேன் அதற்க்கு 'இவள் படித்து ஒன்றும் ஆகபோவதில்லை ஆனால் அவன் படித்தால் எங்காவது போய் எங்களை காப்பாற்றுவான்' என்று கூறி சென்றார்கள். இது நமது கிராமத்தில் மட்டுமல்ல பரவலாக காணபடுகின்ற சாதரண ஒரு நிகழ்வு. மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வு ஒரு சமூக பிரச்சனையாகவே கருதுகிறேன்.குழந்தை பருவத்திலேயே கற்ப்பிக்கபடுகிறது நீ இதற்க்கு தகுதியுடையவன், நீ இதற்க்கு மட்டும் தான் தகுதியுடையவள் என்று,

ஆலயங்கள் பல எழுப்பி அதில் தம் அடையாளங்களை பதித்தனர் நமது முன்னோர்கள்.இன்றும் அதைத்தான் செய்கின்றனர்,இதுவல்ல இன்றைய அவசியம்,விவசாயம் சார்ந்த உற்பத்தியினால் நிறைவு அடைந்தனர் நமது முன்னோர்கள்,ஆனால் இன்றைய நிலை பொருள் ஈட்டல் என்பது கிராமம் சார்ந்ததாக இல்லை,இடம்பெயர்ந்த அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது ஆகவே அதற்க்கு ஏற்றவாறு நமது இளைங்ஞனை தயார்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

ஒருமைக்கன் நான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.

வாழ்த்துக்களுடன்,

கண்ணன்.
பஹ்ரைன்.

சனி, செப்டம்பர் 26

ஆம்பலாப்பட்டு கல்வி அறகட்டளை நிதியளிப்பு கூட்டம்.

ஆம்பல் மன்றத்தின் ஆலோசகர் திரு. சக்திவேல் கண்டியர்

C.ராஜா சிதம்பரம். பொருளாளர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

K.S.M. மணிவேல். தலைவர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

19.09.2009 தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு.

அகதிகளாக வாழும் தமிழர்கள்?

சா. ஷேக் அப்துல்காதர்

First Published : 19 Sep 2009 11:56:00 PM IST

Last Updated :


வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் பல்வேறு காரணங்களால் தங்கள் பாஸ்போர்ட்டை இழந்து, சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக துபை, அபுதாபி, சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள் ஓரளவு நியாயமான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், உதவியாளர், தொழிலாளர், அலுவலக உதவியாளர் என பணிபுரியும் விசாவில் சென்ற அனைவரும் அங்கு பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்றால் கை நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடு பல லட்சம் செலவு செய்து செல்கின்றனர். அங்கு சென்ற பிறகு அனுபவிக்கும் இன்னல்களால் வேறுவழியின்றித் தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
வளைகுடா நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தநிலை இப்போது இல்லை. அங்கு பெருமளவில் கட்டுமானப் பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தினர். அங்குள்ள கடுமையான வெயிலில் கட்டுமானப் பணி செய்கின்றனர்.
வட்டிக்கோ, நகைகளை விற்றோ பணம் பெற்று அதன் மூலம் வேலைக்குச் செல்வோர் விசாவுக்காகச் செலவு செய்த தொகை கிடைக்கும் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், அந்நாட்டில் பணி செய்ய விசா வழங்கியவரிடமோ அல்லது அந்நாட்டு அரசிடமோ பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்.
அதன் பின்னர்தான் அந்நாட்டில் பணி செய்ய அடையாள அட்டை வழங்கப்படும்.
பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் திரும்பும்போது, பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் முதலில் மொழி பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆங்கிலம், இந்தி பேசத் தெரிந்திருந்தால் மட்டுமே வளைகுடா நாடுகளில் சாதாரணமாக வாழ முடியும். இல்லையெனில், மொழியைக் கற்கும் வரை சிரமம்தான். இருப்பினும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் தமிழர்கள் வேறு வழியின்றிப் பணிபுரிகின்றனர்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரில் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விடுகின்றனர். பலர் பணியில் சேர்ந்த நிறுவனம் பிடிக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.
அவ்வாறு பணி செய்பவர்களுக்கு மன்னிப்பு அளித்து அந்நாட்டு அரசாங்கம் அவர்களை சொந்த நாட்டுக்கு, அந்த நாட்டுச் செலவில் அனுப்பி வைக்கும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
தற்போது, வளைகுடா நாடுகளில் பாஸ்போர்ட் இன்றி தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியால், அங்கு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் கிடைத்த வருமானத்தில், தங்குவதற்கு இடம் இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரச்னையில் உள்ளவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டாலும், தேவையான உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அகதிகளாக வாழும் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி. தினமணி

வெள்ளி, செப்டம்பர் 25

எனது சிறிய முயற்சிக்கு உதவிய ஆம்பல் மன்றம் பகரின் மற்றும் நண்பர்கள்.



ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் அரசின் உதவியோடு நடைபெற்று கொண்டுருக்கும் பள்ளி கட்டிட வேலைபாட்டிற்கு பகரினில் இயங்கிகொண்டுருக்கும் ஆம்பல் கல்வி வளர்ச்சி மன்றம் மூலமாக தினார் 50.000
மற்றும் கீழ்வரும் நபர்களின் மூலம் பெற்ற நிதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக செலவிடப்படும்.
  1. எஸ்.எ.எம்.கண்ணன் ----------------15
  2. சி.ராஜா சிதம்பரம் ------------------- 25
  3. கருணாநிதி ---------------------------20
  4. கரிகாலன் -----------------------------15
  5. அறிவழகன் ---------------------------05
  6. வெற்றிசெல்வன் ---------------------05
  7. சிவகுமார் ------------------------------05
  8. ராமமூர்த்தி ----------------------------05

புதன், செப்டம்பர் 23

ஈழம்

என் தேசத்துள் என்னோடு
பயணிக்கின்ற என் சக தேசிய
இனங்களே - ஒற்றை கேள்வி,
உங்களில் எந்த இனத்திற்கு
எதிரானவன் என் ஈழ தமிழன்.

எனையாழ்கின்ர என்னவர்களே
கூறுங்கள் எதைஇழந்து என்னவனை
காக்கபோகிறோம்,
வேண்டாம் இன்னொரு ஈழம்
என் தேசத்துள்,
தலைவாழ்ளில்லா தேசமாய்
என் பாரத மாத வாழமாட்டாள்.

படித்ததுண்டு,கேட்டதுண்டு என்
குல பெருமைதனை வேர்றவன்
என்னையாண்ட கதையினை தவிர.

சேர,சோழ,பாண்டிய வம்சம்
தமிழானாய் தனித்து இருந்ததால் தான்
கண்ணகிக்கு கோயிலும், காவேரி நீரும்
இன்னும் பெருமைகொள்ள ஏராளம்.

ஒரு வரலாறு என்னோடு வாழ்ந்த
அனுபவம் - சக தோழனை போல்
மாவிரனின் மரணம் - எல்லா
குடியிலும் ஈழத்திற்கு ஆள்
கேட்டான் அழ ஆளில்லை அவன் குடியில் ,
காகிதத்தில் எழுத படவில்லை - உன்
வரலாற்று அழித்துவிட - நாளை
என் சந்ததிக்கு சொல்வேன்
வாய் மொழியாக ,கதையாக, கவிதையாக
வேலுபிள்ளை பிரபாகரன் என்றொரு
வீர வரலாறு.

இந்தியாவில் போலீஸ்





ஆத்மா,

ஆம்
இறந்த பின்னும்
வாழ்கிறான் - ஏழை
இந்தியன்

நிறைவேறா
ஆசைகளுடன்.

மக்கள் ஆட்சி.

வாக்கு சாவடியை
வேகமாக வெளியேறினான்

இனாமாய் கிடைத்த ரூபாயில்
"மக்கள் ஆட்சி'யை பார்க்க.