திங்கள், பிப்ரவரி 8

இறையாண்மை மிக்க நாடா இலங்கை?

பரவலாக எல்லோரலும் எதிர்பார்க்கபட்ட நிகழ்வு தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது.ராஜபக்கியை எப்போது எதிர்க்க தொடங்கினாறோ அன்றே நடைபெற வேண்டியது காலம் தாழ்ந்து நடைபெற்றுயுள்ளது.'என் மீது நடவடிக்கை எடுக்கபடுமானால் ரகசியங்களை வெளியிடுவேன்' என்று கூறிய மாஜி இராணுவ தளபதி தற்பொது தர,தரவென இழுத்துசெல்லப்பட்டு ரகசிய இடத்தில் விசாரனை என்று செய்திகள் வருகின்றன.என்ன மாதிரியான ரகசியமாக இருக்ககூடும்? இறுதி கட்ட போரில் எவ்வாறு மனித உரிமை மீறல் செய்தோம்,மனிதர்களை பல்வேறு விதமான சித்ரவதை செய்து கொன்றது ஹிட்லர் மட்டுமல்ல நாங்களும் தான், என்று மாஜி ராணுவ தளபதி மற்றும் எதிர்கட்சிகளின் அதிபர் வேட்பாளர் கூறுவரேனால் தனது முகதிரை கிழிக்கபட்டுவிடும் உலக அரங்கில் என்றா அரங்கேறியுள்ளது? இல்லை,,,






சிங்கள ஆதிக்க மனோபாண்மை வெளிபடுத்துகின்ற மற்றொரு நிகழ்வுதான் இது என்றே கருதுகின்றேன். இத்தனை நாள் உரிமை கேட்டு போரடிய தமிழனை அழித்தாகிவிட்டது,இனி நான் தான் இங்கே ஹிட்லர் எனவே மற்றொறு ஹிட்லர் தேவையில்லை என்று தன் பங்காளியை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை(?) செய்து கொண்டு இருக்கின்றார் ராஜபக்கி. இறுதிகட்ட போரில் 'மனித பேரழிவு செய்துகொண்டுள்ளது இலங்கை அரசு' என்று கத்தி,கதறிய தமிழக மக்களுக்கும்,அகதிகளாய் தனது அடையாளங்களை தொலைத்துவிட்டு நிற்கின்ற எனது உறவுகளுக்கும் கூறிய வார்த்தை 'இறையாண்மை மிக்க நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தவறு' என்று கூறி, இலங்கை அரசின் மனித பேரழிவினை தாய் தமிழகத்தின் மூலமாக உலக அரங்குக்கு எடுத்து செல்வதை தடுத்த இந்திய ஆட்சியாளர்கள் இன்று என்ன சொல்ல போகிறார்கள்?



புதன், பிப்ரவரி 3

ஏமாறுவது அவர்கள் அல்ல...

முன்பெல்லாம் நாம் கேள்விபட்டுருப்போம்.அதாவது மாதம் இருபதாயிரம் சம்பளம் மற்றும் நல்ல கெளரவமான வேலை என்று சொல்லிதான் எனக்கு விசா கொடுத்தார்கள் என்பதாயிரம் வாங்கிகொண்டு,ஆனால் நான் இப்போது பார்பது என்னவோ சில நேரம் கட்டிட வேலை, இல்லையெனில் க்லீனிங்க் வேலை என்று மெத்தபடித்த பலர் புலம்புவதை கேள்விபட்டுருப்போம்.




கடந்த இரு தினங்களாக பஹ்ரைன் செய்திதாளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு நிகழ்வு. கேரள மாநிலத்தை சார்ந்த ஒரு யுவதி இந்திய தூதரகத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார், அதாவது, அதே மாநிலத்தை சார்ந்த ஒருவர் விசாவிர்க்கு நாற்பதாயிரம் பெற்றுகொண்டு, ஒட்டலில் சர்வர் வேலை மாதம் இருபதாயிரம் என்று சொல்லி இங்கு அழைத்து வந்திருக்கின்றார்.இங்கு வந்த பின்புதான் அந்த யுவதிக்கு தான் ஏமாற்றபட்டுள்ளோம் என்று தெரியவருகிறது, மட்டுமல்லாது வலுகட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தபட்டு இருக்கிறாள். இதிலிருந்து தப்பிக்க வேறு வழியறியாது இந்திய தூதரகத்தை அனுகி புகார் தெரிவித்து உள்ளார்.தூதரகமும் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அந்த கேரள நபரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றது.


படித்த இளைஞர்கள் சில நேரங்களில் கட்டிட வேலை மற்றும் க்லீனிங்க் வேலை செய்தாலும் என்றாவது ஒருநாள் தான் நினைத்ததை சாதிதுவிட முடிகின்றது, அல்லது தனது ஒப்பந்தம் முடிந்த பின்பு நாட்டிற்கு சென்று ஏதாவது செய்து கொள்ளமுடிகிறது(?).ஆனால் பெண்களின் சூழ்நிலை இவ்வாரக பெரும்பாலும் அமைவதில்லை.ஆகவே பெண்கள் வெளிநாட்டு வேலை என்று வரும்போது அனைத்துவிதமான வழிகளிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டிவருகிறது. ஏதோ ஒருவழியில் வெளிநாடு சென்றுவிட்டால் போதுமென்று இந்திய அதிகாரிகளையும்,சட்ட திட்டங்களையும் ஏமாற்றிவிட்டு வருகின்றவர்கள் இங்கு வந்த பின்பு ஏமாறுவது அவர்களாக கூட நேரலாம்.