வியாழன், மே 13

'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சிகள்.


படத்தினை க்ளிக் செய்து 'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சியை காணலாம்.

புதன், மே 12

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் III

அருள்வாக்கு,ஆசி வழங்குவது என்பன மட்டுமென்றி இதுபோல் பல பகுத்தறிவுக்கு எட்டாத சடங்குகள் மக்களின் வாழ்கைமுறையோடு ஒட்டி தவிர்க்க முடியாத சடங்குகளாக மாறிவிட்டன. பல வேத நூல்களை படித்து அதை முழுமையாக கிரகித்துகொண்டு மக்களின் வாழ்கை முறைக்கு தேவையான கருத்துகளை மட்டும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்துகின்ற பெரியோர்களை நமது முன்னோர்கள் மதித்து,போற்றினர். ஆனால் இன்றைய நிலை என்பது வேறு, ஆன்மிக சொற்பொழிவு செய்கிறவர்களையே நாம் கடவுளுக்கு இணையான நிலையினை கொடுக்க முயற்சிக்கிறோம்.அதன் பலன் நாம் தினந்தோறும் செய்திதாள்களிலும்,தொலைகாட்சிகளிலும் காண்கின்றோம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்து மத ஆன்மீகவாதிகளும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சமம் ஏனெனில் பொருளாதரதிலும் ஆகட்டும்,புகழில் ஆகட்டும் இவர்களே முன்னனி.


எனக்கு தெரிந்தவரை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் வேத நூல்களை படித்து தெரிவாகி அதில் மக்களுக்கு தேவையான கருத்துகளையோ,ஆன்மிக சொற்பழிவோ,திறமையான மேஜிக்கோ செய்வதாக தெரியவில்லை.சராசரி நடுதர மக்களின் தேவையான கடவுள் பெயர் சார்ந்த ஆறுதல் இவைகளை ஏதோ ஒரு வடிவில் அவர்களின் தேவைகளை அறிந்து வெளிபடுத்துவதினாலும் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் போன்றோரின் வளர்ச்சி அதீதமாகபடுகின்றது.






ஆம்பலாபட்டு கிராம அரசியல் என்பது 1996-க்கு முற்பகுதிவரை முழுமையாக கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் மட்டும் கோழோச்சி கொண்டிருந்தனர்.பிறகு ஏற்பட்டு சில மாறுதல்கள் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களை ஆம்பலாபட்டு வடக்கில் ஏற்படுகின்ற மாறுதல்களை வேடிக்கை பார்கிறவர்களாக மட்டுமே ஏற்படுத்திவிட்டது.இதனால் சில விமரிசனதிர்க்கு உட்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன.இதில் அதீதமாக ஆன்மீகம் சார்ந்த மாறுதல் ஆகும்.ஆம்பலாபட்டு கிராமவாசிகள் சிரியவர் முதல் பெரியோர்வரை எல்லா விசயங்களையும் விமர்சிக்ககூடிய ஆற்றயுடையவர்,இந்த ஆற்றலை ஏற்படுத்திய பெறுமை பொதுவுடமை இயக்கத்தவர்களை சாரும்.


சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற தனிபட்ட மனிதரின் வாழ்கையில் ஏற்பட்ட மாறுதல் வேண்டுமெனில் அவரை மிக சிறந்த மனிதனாக மாற்றி இருக்கலாம்.அதன் பலன் பாழடைந்த சிவன் கோயில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு புதிப்பிக்கபடுகிறது,சில இளைஞர்கள் நல்லதொரு வழிகாட்டளுடன் ஆன்மிக பணி என்றொரு நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையை விமரிசனம் செய்வது என் நோகம் அல்ல இருப்பினும் இதுபோல் தன் பரிவாரங்களுடன்
செயல்பட ஆரம்பித்த ஆன்மீகசெயல்கள் தான் இன்று மடாலயங்கள்,ஆதினங்கள் என்று கூறிகொண்டு மூடபலக்கவழக்கங்களையும்,சாதிய கொடுமைகளையும் தாங்கிகொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்கின்றன, மக்கள் தன்நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கையையும் அதன் மூலம் வருகின்ற செயல்களை தன் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற பெறும்மாற்றமாக கருதி வாழ்கின்றனர்.ஆகவே அவர்கள் அந்த நம்பிக்கைய கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழ சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரனின் செயல் ஊக்கமாக இருக்குமாயின் அதுவே அவரின் சிறப்பான ஆன்மீக பணியாக காலம் அவரை வாழ்த்தும், இவை தவிர்த்து உரையாடலிலும்,உருவத்திலும் தன்னை மாற்றிகொள்வதன் மூலம் ஆதின முறைக்கு மாறுகின்ற ஒரு வழியாக
கருத வேண்டியதில்லை.
 
 

முற்றும்.
-------------------------------------