வியாழன், ஜூலை 1

வாட்டாக்குடி இரணியனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு; ஜெயா தொலைகாட்சியின் 'கிரைம் டைரி'

அன்றைய பிரிக்கபடாத மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுகோட்டைக்கு அருகில் வடசேரி என்ற இடத்தில் காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே 5தேதியில் சுட்டு கொல்லப்பட்ட வாட்டாக்குடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் இவர்களை பற்றிய ஒரு சிறு தகவலாக ஜெயா தொலைகாட்சில் 'கிரைம் டைரி' என்ற நிகழ்ச்சியில் தொகுத்திருந்தனர்.இந்த பகுதியில் விவசாய தொழில் சார்ந்த மக்களை வாழையடி வாழையாக அடக்கி ஒடுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பண்னையார்களுக்கு எதிராக கொதித்தெழுந்து ஒத்த கருத்துடைய இளைஞர்களை பொதுவுடைமை என்ற உயர்ந்த தத்துவத்தின் கீழ் ஒருமுகபடுத்தி, போரடிய வாட்டாக்குடி இரணியன் என்ற மாவீரனை அதிகார மையம் வஞ்சகமாக 1950 மே 5 ல் சுட்டுக்கொன்றனர். வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான் ஓடை சிவராமன், இவர்களோடு இணைந்து போரடிய மற்ற தோழர்கள் பொதுவுடைமை இயக்க உயர்மட்ட குழு எடுத்த முடிவான மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து போரடி ஒடுக்கபட்ட மக்களுக்கு சுயமரியாதை வாழ்வை பெற்று தருவதென என்று எடுத்த முடிவால், அதிகார மையத்திடம் சரணடைந்த இளைஞர்கள் கடுமையான சிறைதண்டனைக்கு பிறகு வெளிவந்து தாங்கள் கொண்ட கொள்கையின் பிடிப்பால் மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு,நில சீர்திருத்த முறை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போரடி மாற்றத்தினை கண்டு இன்று வாழ்கையின் கடைசி கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரின் அனுபவத்தோடு ஜெயா தொலைகாட்சியில் அவ்வை மீடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர்.இது போல் நிகழ்சிகளுக்கு நேரம் வழங்கிய ஜெயா தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஒளி காட்சியை காண இங்கே சொடுக்கவும்.

சுதந்திர இந்தியாவில் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வினை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு சுயமரியாதை வாழ்வினை பெற்று தருவதற்காக போரடி இறந்த இவர்கள் ஏற்படுத்திய மாற்றம்,இப்பகுதியின் இன்றைய மக்களின் சுயமரியாதை வாழ்க்கையின் அடிநாதம் என்றே குறிப்பிடலாம்.வாட்டாக்குடி இரணியனின் நெருங்கிய சகாக்களில் எனது தந்தையும் ஒருவர் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன்.(நிகழ்சியின் க‌டைசியில் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.முருகையன்)