செவ்வாய், டிசம்பர் 21

மக்களாட்சி=காங்கிரஸ்+தி.மு.க+நீரா ராடியா.



கடந்த சில மாதங்களாக பரபரப்பாக செய்திதாள்களில் இடம் பிடித்து இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்பெக்ட்ரெம் ஊழல் அதை தொடர்ந்து பாரளுமன்ற கூட்டதொடர் முடக்கபட்டது இவையாவும் ஜனநாயகம் என்பது சிலரின் விருப்ப,வெறுப்புக்களுக்கு உட்பட்டது என்பதனை நிருபித்துவிடது இந்திய போலி ஜனநாயகம்.வழக்கம் போல் எதிர்கட்சி ஆளும் கட்சியாகட்டும்,ஆளும் கட்சி எதிர் கட்சியாகட்டும் ஒருவருக்கொருவர் நியாப்படுத்திகொள்ள வசதியாக இந்திய பாமரனின் சகிப்புதன்மை அமைந்து விட்டது.

பாமர தொண்டன் அறியாமையால் தலைமை செய்யும் அனைத்தும் சரியானெதென்றும்,அவர்கள் செய்யும் ஊழல்களையும்,தவறுகளையும் நியாயபடுத்தி
பேசுவது வழக்கமாக்கிகொண்டதினால்,கோடிகளில் புரளும் பதவிகளாகி போனது மக்கள் பிரதினுத்துவம் மற்றும் வாரிசுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல அரசியல் என்பது நியாயபடுத்தப்பட்டுவிடது.

உலகம் போற்றும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி..ஸ்பெக்ட்ரெம்...காமென்வெல்த்...ஆதர்ஷ் குடியிருப்பு...மற்றும் நீரா ராடியா...டாடா...அம்பானி..இதுவாகதான் இருக்குமோ? வாழ்க ஜனநாயகம்...