ஞாயிறு, ஜனவரி 16

தேவைதான இந்த பக்தி ?

கேரள ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின் போது 109 பக்கதர்கள் உயிர்யிழந்தனர் என்ற செய்தி, தமிழக மக்களிடையேதான் மிக அதிக சோகத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.ஏனெனில் அதிக அளவில் தமிழகத்தினை சார்ந்த ஜயப்ப பக்தர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். தமிழகத்தில் அதி விமர்சயாக கொண்டாடபடும் பண்டிகை தினத்தின் போது சோக நிகழ்வு ஏற்பட்டு இருப்பது இந்த வருட பண்டிகை சோகம் நிறைந்ததாகவே காணபடுகிறது.


இந்த சோக நிகழ்வின் ஊடே ஒரு கேள்வி எழுகிறது தேவைதான இந்த பக்தி..?

அனேக தமிழக கிராமங்களில் காண நேர்ந்துதிருக்க கூடும் ஏதோ ஒரு பாழடைந்த கோயில்.நமது முன்னோர்கள் நம்பிக்கையோடு வழிபட்ட தளங்கள் இன்று பாழடைந்து,பூசை மற்றும் இத்தியாதி...இத்தியாதி.. செய்க கூட ஆள்அரவமற்று வவ்வால்(?) குடிகொண்டுருக்கும். நமது முன்னோர்களின் நம்பிக்கை இன்று தகர்ந்து போனது ஏன்? இது ஏதோ பகுத்தறிவாதிகள் ஏற்படுத்திய சதியோ மற்றும் மக்களிடத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதுஎன்றோ அல்ல..உச்ச கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்களால்தான் இன்று இந்த நிலைமை.


ஒவ்வொரு வருடமும் கேரள ஜயபனுக்கும்,ஆந்திர ஏழுமைலையானுக்கும் படையெடுக்கும் தமிழக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கணக்கில் அடங்கா. இந்த இருவருக்கும் ஏன் இந்த முக்கியத்துவம்..? நமது முன்னோர்கள் நம்பிகையோடு வழிபட்ட தளங்கள் பாழடைந்து கிடக்கின்றன ஏன்..? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை..?


பக்தர்களின் நம்பிக்கையை மூலதனமாக்கும் அரசும் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள்,குறைந்தபட்சம் பாதுகாப்பு அளிக்ககூடவா முடியவில்லை..?

பகுத்தறிவையும் தாண்டி சில கேள்விகள் எழதான் செய்கின்றன.

அதீத கடவுள் நம்பிக்கை பத்தர்களே முதலில் நம்பிக்கையை நம்மிடமிருந்தே தொடங்குவோம், பின்பு எல்லைகளை கடந்து.

வெள்ளி, ஜனவரி 14

பொங்கல் வாழ்த்து




வான் பொய்தபோதும்
வயல் கொண்ட நீர்
வற்றிடா போதும்,
நித்தம் கலனி கண்டு
கிட்டிய கால் பங்கும்
உலக ஒட்டதின் ஒவ்வா
பயனாய் ஆன போதும்,
செய்திடுவோம் தீதுயின்றி
உலகம் உய்ய..


என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.