வியாழன், மார்ச் 25

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.

தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.


தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.


'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''


நானும் சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன்.

ஞாயிறு, மார்ச் 21

காவேரி


காலம் தவறாத
நுறைகொண்ட
காவேரின் முதல்
துளி கண்ட
என் பாட்டண்
அள்ளிபருகி
ஆனந்தம் கண்டதாக
தந்தையின் பகிர்வு.

மாறிய பருவமும்
மறுக்கின்ற மனித
நேசமும் - அடிக்கொரு
ஆழ்துளை என்றானது.

பிரசவ கால
நினைவுகள்
பெண்களுக்கு
மட்டுமல்ல
என்
உடன்பிறப்புக்கும் தான்,
கலம் கண்ட
கதிர்களை
காணும்பொழுது.

காலம் கடந்தாவது
வந்துவிடு
வருடத்திற்கு
ஒருமுறை
உறிஞ்சப்பட்ட
என்
பூமியை
குளிர்விக்க
தாயே காவேரி.

படம்: இணையதளத்திலிருந்து .

வெள்ளி, மார்ச் 5

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்...


காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.

இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.

தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,

உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.

திங்கள், பிப்ரவரி 8

இறையாண்மை மிக்க நாடா இலங்கை?

பரவலாக எல்லோரலும் எதிர்பார்க்கபட்ட நிகழ்வு தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது.ராஜபக்கியை எப்போது எதிர்க்க தொடங்கினாறோ அன்றே நடைபெற வேண்டியது காலம் தாழ்ந்து நடைபெற்றுயுள்ளது.'என் மீது நடவடிக்கை எடுக்கபடுமானால் ரகசியங்களை வெளியிடுவேன்' என்று கூறிய மாஜி இராணுவ தளபதி தற்பொது தர,தரவென இழுத்துசெல்லப்பட்டு ரகசிய இடத்தில் விசாரனை என்று செய்திகள் வருகின்றன.என்ன மாதிரியான ரகசியமாக இருக்ககூடும்? இறுதி கட்ட போரில் எவ்வாறு மனித உரிமை மீறல் செய்தோம்,மனிதர்களை பல்வேறு விதமான சித்ரவதை செய்து கொன்றது ஹிட்லர் மட்டுமல்ல நாங்களும் தான், என்று மாஜி ராணுவ தளபதி மற்றும் எதிர்கட்சிகளின் அதிபர் வேட்பாளர் கூறுவரேனால் தனது முகதிரை கிழிக்கபட்டுவிடும் உலக அரங்கில் என்றா அரங்கேறியுள்ளது? இல்லை,,,






சிங்கள ஆதிக்க மனோபாண்மை வெளிபடுத்துகின்ற மற்றொரு நிகழ்வுதான் இது என்றே கருதுகின்றேன். இத்தனை நாள் உரிமை கேட்டு போரடிய தமிழனை அழித்தாகிவிட்டது,இனி நான் தான் இங்கே ஹிட்லர் எனவே மற்றொறு ஹிட்லர் தேவையில்லை என்று தன் பங்காளியை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை(?) செய்து கொண்டு இருக்கின்றார் ராஜபக்கி. இறுதிகட்ட போரில் 'மனித பேரழிவு செய்துகொண்டுள்ளது இலங்கை அரசு' என்று கத்தி,கதறிய தமிழக மக்களுக்கும்,அகதிகளாய் தனது அடையாளங்களை தொலைத்துவிட்டு நிற்கின்ற எனது உறவுகளுக்கும் கூறிய வார்த்தை 'இறையாண்மை மிக்க நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தவறு' என்று கூறி, இலங்கை அரசின் மனித பேரழிவினை தாய் தமிழகத்தின் மூலமாக உலக அரங்குக்கு எடுத்து செல்வதை தடுத்த இந்திய ஆட்சியாளர்கள் இன்று என்ன சொல்ல போகிறார்கள்?



புதன், பிப்ரவரி 3

ஏமாறுவது அவர்கள் அல்ல...

முன்பெல்லாம் நாம் கேள்விபட்டுருப்போம்.அதாவது மாதம் இருபதாயிரம் சம்பளம் மற்றும் நல்ல கெளரவமான வேலை என்று சொல்லிதான் எனக்கு விசா கொடுத்தார்கள் என்பதாயிரம் வாங்கிகொண்டு,ஆனால் நான் இப்போது பார்பது என்னவோ சில நேரம் கட்டிட வேலை, இல்லையெனில் க்லீனிங்க் வேலை என்று மெத்தபடித்த பலர் புலம்புவதை கேள்விபட்டுருப்போம்.




கடந்த இரு தினங்களாக பஹ்ரைன் செய்திதாளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு நிகழ்வு. கேரள மாநிலத்தை சார்ந்த ஒரு யுவதி இந்திய தூதரகத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார், அதாவது, அதே மாநிலத்தை சார்ந்த ஒருவர் விசாவிர்க்கு நாற்பதாயிரம் பெற்றுகொண்டு, ஒட்டலில் சர்வர் வேலை மாதம் இருபதாயிரம் என்று சொல்லி இங்கு அழைத்து வந்திருக்கின்றார்.இங்கு வந்த பின்புதான் அந்த யுவதிக்கு தான் ஏமாற்றபட்டுள்ளோம் என்று தெரியவருகிறது, மட்டுமல்லாது வலுகட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தபட்டு இருக்கிறாள். இதிலிருந்து தப்பிக்க வேறு வழியறியாது இந்திய தூதரகத்தை அனுகி புகார் தெரிவித்து உள்ளார்.தூதரகமும் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அந்த கேரள நபரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றது.


படித்த இளைஞர்கள் சில நேரங்களில் கட்டிட வேலை மற்றும் க்லீனிங்க் வேலை செய்தாலும் என்றாவது ஒருநாள் தான் நினைத்ததை சாதிதுவிட முடிகின்றது, அல்லது தனது ஒப்பந்தம் முடிந்த பின்பு நாட்டிற்கு சென்று ஏதாவது செய்து கொள்ளமுடிகிறது(?).ஆனால் பெண்களின் சூழ்நிலை இவ்வாரக பெரும்பாலும் அமைவதில்லை.ஆகவே பெண்கள் வெளிநாட்டு வேலை என்று வரும்போது அனைத்துவிதமான வழிகளிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டிவருகிறது. ஏதோ ஒருவழியில் வெளிநாடு சென்றுவிட்டால் போதுமென்று இந்திய அதிகாரிகளையும்,சட்ட திட்டங்களையும் ஏமாற்றிவிட்டு வருகின்றவர்கள் இங்கு வந்த பின்பு ஏமாறுவது அவர்களாக கூட நேரலாம்.