வெள்ளி, ஏப்ரல் 23

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் II

இனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ?' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.


வருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது? வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(?) பேச்சாற்றலா?



நினைவுகள் தொடரும்...

புதன், ஏப்ரல் 14

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் I

அனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்து!படர்ந்த! ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம்! என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.

பொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.





இன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

மல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு (?) பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.

சரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.



நினைவுகள் தொடரும்...

வியாழன், மார்ச் 25

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.

தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.


தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.


'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''


நானும் சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன்.

ஞாயிறு, மார்ச் 21

காவேரி


காலம் தவறாத
நுறைகொண்ட
காவேரின் முதல்
துளி கண்ட
என் பாட்டண்
அள்ளிபருகி
ஆனந்தம் கண்டதாக
தந்தையின் பகிர்வு.

மாறிய பருவமும்
மறுக்கின்ற மனித
நேசமும் - அடிக்கொரு
ஆழ்துளை என்றானது.

பிரசவ கால
நினைவுகள்
பெண்களுக்கு
மட்டுமல்ல
என்
உடன்பிறப்புக்கும் தான்,
கலம் கண்ட
கதிர்களை
காணும்பொழுது.

காலம் கடந்தாவது
வந்துவிடு
வருடத்திற்கு
ஒருமுறை
உறிஞ்சப்பட்ட
என்
பூமியை
குளிர்விக்க
தாயே காவேரி.

படம்: இணையதளத்திலிருந்து .

வெள்ளி, மார்ச் 5

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்...


காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.

இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.

தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,

உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.