புதன், மார்ச் 30

35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகள்: தமிழக அரசின் சாதனை பட்டியல்.

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. வீடு, டி கடையென ஒவ்வொரு இடங்ககளிலும் அதன் பாதிப்பு தெரிகின்றன. செய்திதாள்களும் அதன் பங்கிர்க்கு
அரசின் திட்டங்களை ஆதரிப்பது,விமர்சிப்பது என பல கட்டுரைகள்,செய்திகள் வெளியிடுகின்றன.

தமிழக அரசின் மதுனான கொள்முதல் மற்றும் அதன் பயனாளிகள்,மதுபான விற்பனையின் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடு என்ன..? புள்ளி விபரங்களோடு சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து சிறு தொகுப்பை ஜனசக்தி நாளிதழில் வெளியிட்டனர். சிறப்பான கட்டுரை என்பதினால், இதை எனது வலைபூவின் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஜனசக்தியில் வெளிவந்த அந்த கட்டுரையை
அப்படியே இங்கே பதிவு செய்து உள்ளேன்.



இந்தியாலேயே அதிக மதுபான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியுள்ளது தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சிக்கு முன்பு 10 மது ஆலைகள் பத்தாது என்று இப்போது 19 ஆக உயர்ந்துள்ளது. உற்ப்பத்தியாளர்களின் பெரும்பாலானவர்கள் தி.மு.கவினர் மற்றும் கருணாநிதி குடும்ப விசுவாசிகளே !

மதுபானத்தின் விலையில் பத்து சதவிதமே அதன் உற்பத்தி செலவாகும்.ஆக 90 சதவிகித லாபத்தில் விற்க்கபடும் மதுவில் அரசும் அதை உற்பத்தி செய்யும்
முதலாலிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர்.அதாவது பதினெட்டு ரூபாய்வுக்கு உற்பத்தி செய்யபடும் பிராந்தி ரூபாய் 380 - க்கு விற்க்கபடும்.

அ.தி.மு.க ஆட்சி முடிவடையும் தருவாயில் டாஸ்மாக்கின் விற்பனை 9800 கோடியாக இருந்தது.இப்போது விற்பனையின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு இரண்டு முறை விலை ஏற்றமும் செய்தார்கள்.அந்த வகையில் தற்போது விற்பனை குறைந்தது 30,000 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ இதில் பாதியைதான் கணக்கில் காட்டுகிறது.

ஏன்? என்ன நடக்கிறது? என்று விசாரித்தால் டாஸ்மாக் விற்பனையில் பாதி கணக்கில் வருகிறது.மீதி கணக்கில் காட்டாமல் கபளீகரம்மாகிறது.இந்த திருட்டு
லாபம் ஆட்சியாளர்களாலும் மது உற்பத்திளார்களாலும் பகிர்ந்து கொள்ளபடுகிறது. ஆக,மது விற்பனை லாபம் அரசு கஜானவிற்க்கு மட்டும்மல்ல, குடும்ப கஜானாவிற்க்கும்தான்!

அ.தி.மு.க ஆட்சியிலும் மது விற்பனையானது.ஆனால் லாபம் முழுமையாக அரசுக்கு வந்தது.அதேபோல் பார் நடத்துபவர்களிடமிருந்து வரியும் சரியாக
வசூல் செய்யபட்டது.இப்போது வரியே வசூலாவதில்லை - மாமூல்தான் வசூலாகிறது.மதுபான விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் எந்த உருபடியான
சமுதாய வளர்ச்சி திட்டமோ,நிரந்தர பலன் தரும் மக்கள் மேம்பாட்டு திட்டமோ செயல்படுத்தபடவில்லை.மக்களை பிச்சைகாரர்களாக்கி இலவசங்களுக்காக
கையேந்த வைப்பதே மதுபான விற்பனையின் சூழ்ச்சியாகும்.


மதிவில் கிடைக்கும் வருமான பெரும்பாலும் - ஏழை,எளிய நடுத்தர குடும்பங்களின் உணவு,உடை,கல்வி போன்றவற்றிற்கு பயன்படுத்தபடாமல் அக் குடும்ப தலைவர்களால் டாஸ்மாக்கில் கொடுக்கபடும் பணம் ஆகும்.மது பெருக்கத்தால் தமிழகத்தில் உள்ள லட்சகணக்காண குடும்பங்களில் நிம்மதி பறிபோய்,சண்டை,சச்சரவுகள் வலு பெற்றுள்ளன.
விதவை,பென்ஸன் பெரும் பெண்களில் பெரும்பாலானோர் குடித்துக்குடித்தே செத்துபோன கணவனின் மனைவிமார்கள்...!

இன்றைய தினம் இளைஞர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள், பெண்கள்... புதிதாகவும்,வேகவேகமாகவும் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி வருவதை தடிக்க தவறினால் நாளைய தமிழகம் மீள முடியாத அளவிற்க்கு சீரழிந்து விடும்.

மது விற்பனை அதிகரித்ததால் சாலை விபத்துகளும் அதிகரித்துவிட்டன. தமிழகத்தில் தினசரி சுமார் 40 பேர் சாலை விபத்துகளில் சாவதாக போக்குவரத்து
காவல்துறை தெரிவித்துள்ளது.

காந்திய அமைப்பான சர்வோதய மண்டல் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் நெல்லையில் ரெங்கபுரம் என்ற சிறு கிராமத்தில் உள்ள 400 தலித்து வீடுகளில்
398 வீடுகளில் உள்ளோர்க்கு 15 வயது சிறுவன் உட்பட மதுபழக்கம் இருக்கிறது. அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒருநாள் வருமானம் ஒன்றேகால்
லட்சமாக உள்ளது.

தர்மபுரி மாவட்டம் செக்கொடி கிராமதில் உள்ள 325 வீடுகளில் நடத்தபட்ட ஆய்வில் 35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகளை கணகெடுத்துள்ளனர்.
கணவன்மார்கள் அனைவரும் மதுவிற்க்கு பலியாகியுள்ளனர். ஒரு குடும்பத்திற்க்கு ஒரு நாளுக்கு இருவர் சம்பாதிக்கும் 400 ரூபாயில் 350 ரூபாய் மதுக்கடைக்கு சென்று விடுகிறது.


ஆம் ! தமிழக கிராமங்கள் மதுவில் மூழ்கி சீரழிகின்றன.



நன்றி : ஜனசக்தி நாளிதழ்.



வியாழன், பிப்ரவரி 10

வ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.

ஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!! உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்... உன்னைய யாரு இங்க வரசொன்னது... நீ என்ன வேலை பார்கிரே... ரெம்ப பேசுர.... சரி..சரி எவ்வளவு வச்சிருக்கே...கொடுத்துட்டு போ... மேற்கண்ட அனைத்து வசனங்களும் ஏதோ மீன் கடையிலோ அல்லது காய்கறி கடையிலோ நடைபெருவது அல்ல..திருச்சி விமான நிலைய பயணிகள் வெளியேறும் வாயிலில் நின்று கொண்டு வ‌சூல் வேட்டையில் (சத்தியமா பிச்சை இல்லிங்க!!) ஈடுபடும் சுங்க அதிகாரிகளிடம் சர்வ சாதரணமாக வெளிபடும் வார்த்தைகள். கடந்த இரண்டரை வருடங்களில் மூன்று முறை இதே திருச்சி விமான நிலையத்தின் வாயிலாகத்தான் சென்று வந்து உள்ளேன், ஆனால் இம்முறை பட்ட அனுபவமும், கண்ட காட்சிகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமல்லாது மேலும் தாங்களும் இவ் வாயிலை பயன்படுத்த கூடும்,ஆகவே நீங்கள் எச்சரிகையோடு எவ்வாரு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவே.. கொழும்பு விமான நிலையத்திலிருந்து தொடங்கிவிட்டுருந்தன நினைவுகள்...இப்போது அனைவரும் நமக்காக காத்திருப்பார்கள்..செல்ல மனைவி,அண்ணன்,அண்னி, அத்தான்,அக்கா,எங்கள் வீட்டின் செல்ல வால், இவர்களை இன்னும் சில நிமிடங்களில் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சியோடு இறங்கிய வேகத்தில் முதல் ஆளாக நின்று பாஸ்போர்ட்ல் முத்திரைய பதித்துகொண்டு,அடுத்த கட்டத்திற்க்கு நகர அனைத்தையும் உள்ளே தினித்து விட்டு மறுமுனையை சென்று நின்ற போது,கவனமாக பரிசோதனை இயந்திரத்தை பார்த்து கொண்டிருந்தவர் என்னை பார்த்து அருகில் அழைத்து 'என்னங்க ரெண்டு வச்சிருக்கிங்க என்றார்!!' நான் 'சார்......'' என்றவாறே இழுத்த போது அருகில் இருந்த ஒருவர் 'எங்கிருந்து வர்ரீங்க..என்றார்'' நான் 'கல்ஃப்' என்றேன்..அவர் மற்றவரிடத்தில் 'சார் கல்ஃப்லேருந்து வர்ரவங்களுக்கு மூனுவரை...'' என்றார். தப்பித்தோம் இதை கண்ணில் காட்டினால்தான் நண்பனிடத்தில் மறக்கவில்லை என்று சர்டிபிகேட்டு கிடைக்கும் என்று நினைத்துகொண்டு நகர்ந்தேன்.அடுத்த கட்டத்தின் அபாயம் அறியாது. முதலில் வந்திருந்தாலும் பகுதி நேரம் கொண்டு வந்த பொருளை மீட்டு கொண்டு போகவே சரியாக இருந்தது..எனக்கு பின்னால் அனைவரும் ஆவலோடு முண்டிகொண்டிருக்க நான் எனது உரிமையை விட்டு கொடுக்காமல் முன் நின்று அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியேற முனைந்தபோது.. நான் தள்ளிகொண்டு வந்த ட்ராளியை மறித்து ''நீங்க அங்க போங்க...''' என்றார்.எனக்கு புரிந்து விட்டது எனது ட்ராலில் இருந்த ப்லாஸ்மா டி.வி தான் இதற்க்கு காரணமென்று. மூன்று கௌண்டர் இருந்தாலும் குறிப்பாக நடுவில் இருந்த கௌண்டரை நோக்கி போகுமாறு சைகை செய்யபட்டேன். நான் 'வணக்கம் சார்'' என்றேன். அவர் ' நீங்க கொண்டு வந்திருக்கிற L.C.D டி.விக்கு கஸ்டம்ஸ் கட்டனும் எப்படி...'' என்றவாரே இழுத்தார். நான் ''சார் இது குறைவான விலைக்கே வாங்கினது... என்றவாறே டி.வி வாங்கின விலைபட்டியலை அவரிடத்தில் காண்பித்தேன். அதிகாரி சற்று கோபமாக கணக்கீடு செய்து கொண்டு இருந்தார், அப்போது எனக்கு அருகில் வந்த மற்றொரு வெள்ளை உடையனிந்த அதிகாரி '' என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா...!! என்றவாறே இழுத்தார். நான் அவரிடத்தில் திரும்பி ''சார் நான் கொண்டு வந்திருக்கின்ற டி.வி ரூபாய் இருபத்தி இரண்டாயிரம் கூட மதிப்பு கிடையாது சார் பின்ன ஏன் சார்..''என்றேன். எனக்கு லஞ்சமாக அவரிடத்தில் பணம் கொடுக்க விருப்பமில்லை,லஞ்சம் கொடுக்காமல் வாழ பழகிகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான் ஆகவே அவரிடத்திலும் விலைபட்டியலை காண்பித்தேன். அவர் 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...!! உனக்கெல்லாம் ஐய்யாயிரம்...பத்தாயிரம் போட்டாதான்... இதையல்லாம் கவனித்துகொண்டிருந்த அந்த அதிகாரி சற்று கோபமாக அவரிடத்தில் ''விடுங்க சார் இவனுகளுகெல்லாம்... என்றார்.நிலைமை தீவரமாவதை உணர்ந்த நான் '' சார் உங்க அதிகாரியிடம் பேசனும் என்றேன்..'' அவர் என்னை பார்த்து ''ஏன்யா காலையிலேயே உயிர வாங்கிர..அப்படி ஒரமா நில்லு'' என்றார்,அங்கே சொல்லியும் ஒன்றும் ஆகபோவதில்லை என்ற அர்தத்தோடு. ஒரமாக நின்றுகொண்டு என்னை சுற்றி என்ன நடக்கின்றது கவனிக்க தொடங்கினேன். என்னோடு முன்பு ''என்னப்பா நீ பேசிகிட்டே நிக்கிறே... சாருகிட்ட ஏதாவது கொடுத்து விட்டு போக பாப்பியா... என்றாறே அந்த அதிகாரி ஒருவரை கௌண்டர் முன் கொண்டு வந்து அவரிடத்தில் ''எவ்வளவு வைச்சிருக்கே..'' என்றார். அவர் ''சார் எங்கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு சார்...!!என்றார் பரிதாபமாக. தொடர்ந்து ''திருச்சியெலதான் சார் இப்படி பன்றிங்க...'' சொல்லி முடிப்பதற்க்குள் அந்த மெல்லிய முருக்கு மீசை அதிகாரி கோபமாக அவரிடத்தில் ''உன்னைய யாருயா இங்க வரச்சொன்னது..'' இங்லாந்து ராணி இவர் தாத்தாகிட்டதான் இந்தியாவை எழுதி கொடுத்துட்டு போனது போல இருந்தது அதிகாரம். அந்த பயணிக்கு இதற்கு மேல் பேச இருப்பமில்லை என்று தெரிந்தது ''சார் ஆயிரம் வச்சிகிட்டு விடுங்க வெளில ஆளுங்க காத்துகிட்டுருப்பாங்க.. என்றார் பரிதாபமாக, இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் கைமாரி. இவரை போலவே வெள்ளை சீருடை அனிந்த மற்றஅதிகாரிகளும் வேக,வேகமாக பயணிகளை ஒரம்கட்டி சுங்க துறையின் பெருமையினை காப்பாறினர்(?) ''ஹெலோ..ஹெலோ...'' என்ற சத்தத்தை கேட்டு திரும்பி எனது கௌண்டரை கவனித்தேன், கௌண்டருக்குள் இருந்த அந்த அதிகாரி மற்ற ஒருவரிடம் எனது டி.வியை காண்பித்து ஏதோ கூறிகொண்டு என்னை அழைத்தார், சீருடையேதும் அனிந்திருக்கவில்லை அவர். அவரிடத்தில் ''சார் இந்த டி.வியை நான் வாங்கினது இருபத்திரெண்டாயிரத்துக்கு குறைவான விலை தான் பின்பு ஏன் சார் நான் சுங்கவரி கட்ட வேண்டும்'' என்றேன் பணிவாக. அவர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வெள்ளை காகிதத்தில் நான் கொண்டுவந்த டி.வியின் கம்பெனி பெயர்,அதன் அளவு(LCD) ஆகியவற்றை காண்பித்து இதற்க்கு தாங்கள் மூன்றாயிறத்து அறநூறு கட்ட வேண்டும் என்றார். நான் எனது டி.வியின் விலை மற்றும் அதனுடைய மாடல் தாங்களுடைய வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்டுள்ளதிலிருந்து மாறுபட்டது என நான் டி.வி வாங்கின விலைபட்டியல் மற்றும் டி.வியின் மேல் எழுதப்பட்ட மாடல் (ப்லாஸ்மா) ஆகியவற்றை காண்பித்தேன். அவர் கட்டபஞ்சாயத்து கணக்காக ''சரி நீங்க ஆயிரத்து அறநூறு கட்டிட்டு போங்க..!! என்று கூறிவிட்டு சென்று விட்டார். நானும் சரி நாம கொடுக்கிற காசும் அரசாங்கத்துக்குதானே போகுது என்று அதற்கு மேல் ஏதும் பேசாமல் என்னுடைய பையிலிருந்து பணம் எடுத்து கௌண்டரில் இருந்த சுங்க அதிகாரியிடம் கொடுக்க முயன்றேன். அதுவரை அங்கு நடப்பதை கவனித்த அந்த அதிகாரி, கைக்கு கிடைக்கவேண்டிய பணமும் போகின்றது அதுமட்டுமல்லாது மேல் அதிகாரியிடம் செல்கின்றான் என்று கோபமாக ''இல்ல நீ இரண்டாயிரத்து ஐநூறு கட்டடிட்டு போ..'' என்றார் நான் ''ஏன் சார் என்றேன்'' என்றேன். ''நீ இரண்டு பாட்டில் கொண்டு வந்திருக்க பின்ன எல்லாத்தையும் திறந்து பார்கனும்...என்று கூறிவிட்டு ஒரமாக நில்லுங்க என்றார் சாதரணமாக. எனக்கு புரிந்து விட்டது அப்பட்டமாக அதிகார துஷ்பிரோயோகம்,ஒரு பொருப்பான சுங்க அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வாறு நடந்துகொள்வதோ...லஞ்சம் கொடுக்கவில்லை என கொண்டுவந்திருக்கும் டி.விக்கு அளவுக்கு அதிகமான சுங்க வரி மற்றும் மனஉலச்சல் அளிக்க கூடிய செயல்பாடு.. இனி இங்கு பேசி எந்த பயனுமில்லை,நமக்காக அனைவரும் ஆவலோடு வெளியில் காத்திருக்கிறார்கள் இரண்டுமணி நேரத்திற்க்கு மேலாக,ஆகவே கொடுக்க கூடிய பணமும் அரசாங்கத்திற்க்கு தான் போகின்றது என மனதிருப்தியோடு அவர் கேட்ட பணத்தினை கொடுத்து சுங்கவரி செலுத்திய பேப்பரினை பெற்று கொண்டு வெளியேறினேன்,
சென்னை விமான நிலைய அனுபவம்,மற்றும் நண்பர்களின் மூலம் கோவை விமான நிலைய அனுபவம் இவைகளுடன் ஒப்பிடும் போது திருச்சி விமான நிலைய வெள்ளை உடையனிந்த சுங்க அதிகாரிகள் அவர்களின் பொருப்புகளிலிருந்து விலகி பயணிகளிடம் வாயிலில் நின்று வெளிபடையாக லஞ்சம் பெருவதை காணுபோது, எங்கள் ஊருக்கு அருகில் கரம்பயம் மாரியம்மன் கோயில் உள்ளது அதன் வாயிலில் காவி உடையனிந்த நபர்கள் இதுபோல்தான் நிற்பார்கள், எனக்கு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லையென்றே தோன்றுகின்றது. வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் தெரிவிப்பது யாதனில்; உறவுகளிடத்தில் பொழைக்க தெரியாதவன்,உலகம் புரியாதவன் என்று திட்டுவாங்குவதற்க்கு பதிலாக சுங்க அதிகாரியிடம் 500-ய் கண்ணில் காட்டும்போது,அவர் பேண்டு பாக்கெட்டு வசதியாக தெரியும்படி திரும்பிகொள்வார், அப்போது அதன் உள்ளே தினித்துவிட்டு கம்பீரமாக வெளியேருவதா இல்லை என்னை போல நொந்து..நூடுஸ்.. ஆகி வெளியேரும் போதுகூட மனதில் ஏதோ ஒரு மூலையில் ஆத்ம திருப்தியோடு வெளியேருவதா என நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே.

ஞாயிறு, ஜனவரி 16

தேவைதான இந்த பக்தி ?

கேரள ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையின் போது 109 பக்கதர்கள் உயிர்யிழந்தனர் என்ற செய்தி, தமிழக மக்களிடையேதான் மிக அதிக சோகத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.ஏனெனில் அதிக அளவில் தமிழகத்தினை சார்ந்த ஜயப்ப பக்தர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். தமிழகத்தில் அதி விமர்சயாக கொண்டாடபடும் பண்டிகை தினத்தின் போது சோக நிகழ்வு ஏற்பட்டு இருப்பது இந்த வருட பண்டிகை சோகம் நிறைந்ததாகவே காணபடுகிறது.


இந்த சோக நிகழ்வின் ஊடே ஒரு கேள்வி எழுகிறது தேவைதான இந்த பக்தி..?

அனேக தமிழக கிராமங்களில் காண நேர்ந்துதிருக்க கூடும் ஏதோ ஒரு பாழடைந்த கோயில்.நமது முன்னோர்கள் நம்பிக்கையோடு வழிபட்ட தளங்கள் இன்று பாழடைந்து,பூசை மற்றும் இத்தியாதி...இத்தியாதி.. செய்க கூட ஆள்அரவமற்று வவ்வால்(?) குடிகொண்டுருக்கும். நமது முன்னோர்களின் நம்பிக்கை இன்று தகர்ந்து போனது ஏன்? இது ஏதோ பகுத்தறிவாதிகள் ஏற்படுத்திய சதியோ மற்றும் மக்களிடத்தில் கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதுஎன்றோ அல்ல..உச்ச கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்களால்தான் இன்று இந்த நிலைமை.


ஒவ்வொரு வருடமும் கேரள ஜயபனுக்கும்,ஆந்திர ஏழுமைலையானுக்கும் படையெடுக்கும் தமிழக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கணக்கில் அடங்கா. இந்த இருவருக்கும் ஏன் இந்த முக்கியத்துவம்..? நமது முன்னோர்கள் நம்பிகையோடு வழிபட்ட தளங்கள் பாழடைந்து கிடக்கின்றன ஏன்..? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை..?


பக்தர்களின் நம்பிக்கையை மூலதனமாக்கும் அரசும் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள்,குறைந்தபட்சம் பாதுகாப்பு அளிக்ககூடவா முடியவில்லை..?

பகுத்தறிவையும் தாண்டி சில கேள்விகள் எழதான் செய்கின்றன.

அதீத கடவுள் நம்பிக்கை பத்தர்களே முதலில் நம்பிக்கையை நம்மிடமிருந்தே தொடங்குவோம், பின்பு எல்லைகளை கடந்து.

வெள்ளி, ஜனவரி 14

பொங்கல் வாழ்த்து




வான் பொய்தபோதும்
வயல் கொண்ட நீர்
வற்றிடா போதும்,
நித்தம் கலனி கண்டு
கிட்டிய கால் பங்கும்
உலக ஒட்டதின் ஒவ்வா
பயனாய் ஆன போதும்,
செய்திடுவோம் தீதுயின்றி
உலகம் உய்ய..


என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

செவ்வாய், டிசம்பர் 21

மக்களாட்சி=காங்கிரஸ்+தி.மு.க+நீரா ராடியா.



கடந்த சில மாதங்களாக பரபரப்பாக செய்திதாள்களில் இடம் பிடித்து இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்பெக்ட்ரெம் ஊழல் அதை தொடர்ந்து பாரளுமன்ற கூட்டதொடர் முடக்கபட்டது இவையாவும் ஜனநாயகம் என்பது சிலரின் விருப்ப,வெறுப்புக்களுக்கு உட்பட்டது என்பதனை நிருபித்துவிடது இந்திய போலி ஜனநாயகம்.வழக்கம் போல் எதிர்கட்சி ஆளும் கட்சியாகட்டும்,ஆளும் கட்சி எதிர் கட்சியாகட்டும் ஒருவருக்கொருவர் நியாப்படுத்திகொள்ள வசதியாக இந்திய பாமரனின் சகிப்புதன்மை அமைந்து விட்டது.

பாமர தொண்டன் அறியாமையால் தலைமை செய்யும் அனைத்தும் சரியானெதென்றும்,அவர்கள் செய்யும் ஊழல்களையும்,தவறுகளையும் நியாயபடுத்தி
பேசுவது வழக்கமாக்கிகொண்டதினால்,கோடிகளில் புரளும் பதவிகளாகி போனது மக்கள் பிரதினுத்துவம் மற்றும் வாரிசுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல அரசியல் என்பது நியாயபடுத்தப்பட்டுவிடது.

உலகம் போற்றும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி..ஸ்பெக்ட்ரெம்...காமென்வெல்த்...ஆதர்ஷ் குடியிருப்பு...மற்றும் நீரா ராடியா...டாடா...அம்பானி..இதுவாகதான் இருக்குமோ? வாழ்க ஜனநாயகம்...