புதன், ஜனவரி 20

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் II - என் பார்வை.

முதல் பாகம் முழுவதும் தமிழக பகுதிகளில் குடியேறி வசித்து வந்த தெழுங்கு பேசும் மக்களின் கலாச்சாரங்களை காதல்,நகைசுவை,என்று பல்சுவையோடு தருகின்ற திரு. கி.ராஜ நாரயணன் அவர்கள் தனது இரண்டாம் பாகத்தில்,முழுவதும் சுதந்திர போரட்டம் உச்ச கட்டத்திலிருந்து தொடங்கி சுதந்திரம் பெருகின்ற கடைசி நாள் வரை, நடைபெருகின்ற சம்பவங்களை அலசுகின்ற ஒரு அரசியல் நாவலாகத்தான் எழுதியுள்ளார் என்றே கருதுகின்றேன்.இந்திய தேசிய விடுதலை போரடத்தில்,காந்திய கொள்கைகலிருந்து மாறுபட்டு நின்று அதற்காக தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி கொண்டு போரடிய சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் போரட்டங்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.


இரண்டாம் உலக போருக்கு பின்பு,உலக அரசியலில் ஏற்பட்ட மாறுதலினால் தன் காலனி நாடுகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் ஏற்படுகின்ற பின்னடைவுகளாலும்,இந்திய தேசிய சுதந்திர போரட்டம் மொழி,இனம் மற்றும் எல்லை கடந்து இந்திய துணை கண்டம் முழுவதும் சாதரண குடிமகனையும் சுதந்திரம் தாகம் ஆட்கொள்வதாலும்,ஆங்கில அதிகார மையம் இனி இங்கு தொடருவதில் சிக்கல் என்றே நினைத்து மறுபரிசிலனை செய்திருக்கலாம்,நிலமை இவ்வாற இருக்க காங்கிரஸ் இயக்கம் மட்டுமே இந்திய தேசிய விடுதலை போரட்டத்தினை, முழுவதுமாக தன் வசமாக்கி அதை காலம் காலமாக சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க கொள்ள முயல்கிறது,வெற்றியும் பெற்று வருகின்றது.மட்டுமல்லாது ஒரு குடும்பத்திற்காகவே இந்திய நாட்டின் உச்ச அதிகார மையம் காத்திருப்பது போலவும்,அதற்காக ஒவ்வொறு தலைமுறையிலும் ஒரு தலைவன் உருவாக்கபடுவதும் ஆச்சரியபடவைக்கிறது. பிரிட்டிஷ் இந்திய சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு சுதந்திர இந்தியாவின் அதிகாரம் மையம் மாற்றபடும்போது அதை மூன்றாக பிரித்து தலா காங்கிரஸ் 40%,முஸ்ஸிம் லீக் 40% மற்றும் மற்ற கட்சிகளுக்கு (கம்யூனிஸ்ட் ? ) 20% என்று பிரித்து தருமாறு கேட்பதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்,இதிலிருந்து அறிய முடிகிறது காங்கிரஸ் மட்டுமே இந்திய சுதந்திர விடுதலை போரட்டத்தினை தன் வசமாக்கியுள்ளது.இடதுசாரி சிந்தனைகளோடு இந்திய விடுதலை போரட்டத்தில் பங்குகொண்ட எத்தனை தலைவர்களை வரலாறு நமக்கு சொல்லிகொடுத்துள்ளது,நில சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்கள் அடையாளமாக திகழ்ந்த காங்கிரஸ் இயக்கம் இன்றும் வேறுவடிவில் அதைதான் பின்பற்றுகிறது.ஆனால் ஆரம்பம்முதல் அடிதட்டு மக்களின் தோழனாக நின்று அவர்களோடு இணைந்து போரடிய காங்கிரஸ் அல்லாத இயக்கத்தவர்களை எத்தனை பேருக்கு இன்று தெரியும்?.


அகிம்சா வழியில் போரடமல் மாற்று சிந்தனைகளோடு சுதந்திரத்திற்கு போரடி ஆங்கில அதிகாரத்திடம் மண்டியிட மறுத்து உயிர் துறந்த போது அவர்களுக்கு எழுகின்ற மக்கள் ஆதரவினை எவ்வாறு தமக்கு சாதகமாக மாற்றிகொண்டனர் என்று கதாபாத்திரங்கள் வழியே நமக்கு உணர்துகின்றார் ஆசிரியர்.உதரணமாக பெஷாவர் கூர்க்கா படை,கப்பற் படை வீரர்களின் எழுச்சி மற்றும் பகத் சிங் போன்றோர்களை குறிப்பிடலாம்.


இரண்டாம் உலக போரில் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவம்,பிரிட்டனுக்கு எதிரான அணிகளோடு இணைந்து இந்திய விடுதலைக்கு வெளியிலிருந்து போரடும் போது ஜெர்மனுக்கு ஆதரவான நிலை நம் மக்களிடம் தோன்றியதையும்,பின்பு அதே ஜெர்மன் மக்கள் சர்வாதிகார அரசிடம்(சோவித் ரஷ்யா) மல்லுக்கு நின்றபோது வெறுக்கின்றதை சுட்டி காட்டியுள்ளார் ஆசிரியர்.இந்த நிலை ரஷ்யாவின் எழுச்சி உலக அடிதட்டு மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதில் மாச்சரியம்யில்லை.



இருதியாக, ஆசிரியர் தன் கடைசியாக பக்கத்தில் இவ்வாறக குறிப்பிடுகின்றார்...



''பாபுஜி,தேசத்துக்கு சுதந்திரம் வந்துவிட்டது.தேசமே மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறது.நீங்கள் மெளனமாக நூல் நூற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு செய்தி சொல்லவேண்டும்''. என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டு நின்றார்கள்.


பதிலே சொல்லலையாம்;அவர்பாட்டுக்கு ''விர் விர்" என்று நூல் நூற்றுகொண்டுருந்தாராம்.திரும்பவும் பத்திரிகை நிருபர்கள் அதே கேள்வியை காந்திஜியிடம் கேட்டார்களாம்.


ராட்டை சுற்றுவதை நிறுத்தினாராம்.நிருபர்களை பார்த்தாராம்.என்னசொல்லுவாரோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிருபர்களுக்கும் தேசத்துக்கும் அவர் சொன்ன ஒரே வார்த்தை:


"ஒண்ணுமில்லை"


சொல்லிவிட்டு முன்னிலும் வேகமாக நூற்கஆரம்பித்துவிட்டாராம்.சுதந்திரத்தைப்பற்றி கல்கத்தாவில் காந்திஜி சொன்ன வார்த்தை கோபல்ல புரத்திலும் வந்து எதிரொலித்தது.

"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"


அன்னமய்யா அந்த வார்த்தையை தனக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.

-------

எந்த ஒரு படைப்பும் படைபாளிகளின் கருத்துக்களில் மேல் மட்டும் நின்றுவிடாமல்,வாசிப்பாளனிடம் மாறுபட்ட சிந்தனையை ஏற்படுத்துகின்றதோ அது ஒரு சிறந்த படைப்பு என்ற அடிப்படையில் திரு.கி.ராஜ நாரயணன் அவர்களின் நாவல் வாயிலாக என் கருத்துக்களை பதித்துள்ளேன்.வாய்ப்பிருப்பின் வாங்கி படியுங்கள்.

வெள்ளி, ஜனவரி 15

தமிழர் திருநாள் கொண்டாட்டம் பஹ்ரைன்,இடம் இந்தியன் கிளப்.15.01.2010

இதுதாங்க இந்தியன் கிளப் பஹ்ரைன்.
என்னமா வேடிக்கை பாக்கறாங்க மகளிர் (கொஞ்சம் திரும்பி சிரிச்சிருக்கலாம்)

கயிறு இழுத்தல் போட்டி (குயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் பல நிகழ்சிகள் நாங்க போறத்துக்கு
முன்னாடியே முடிஞ்சி போச்சு)

ரொம்ப நன்றிங்க வாழ இலை சாப்பாட்டுக்கு( ஆனா இது முடியல நாங்க போறத்துக்கு முன்னாடி)

ஒவ்வொறு வருடமும் தமிழர் திருநாள் நிகழ்சியினை ஒருகினைத்து
நடத்திகொண்டுருக்கும்

பாரதி தமிழ்சங்கம் பஹ்ரைன் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதன், ஜனவரி 13

பொங்கல் வாழ்த்து


குருவை,சம்பா,தாளடி
என்றன மாறி
ஒருபோகமே ஒசத்தி
என்றாயினும்,
வீடு வருவது
என்னவோ
வெறுங்கையோடுதான்
விவசாயி.

என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்,எழுத்துக்களால் அறிமுகமாகிய புதிய வலைபூ நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சனி, ஜனவரி 9

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் I - என் பார்வை.

சாகித்திய அக்காடெமி விருது பெற்ற திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.கிராமத்து மக்களின் பேச்சு வழக்கிலேயே நாவல் முழுவதும் எழுதி முடித்திருப்பார்.விஜய நகர பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து தமிழக பகுதிகளில் குடியேறி வசிக்க தொடங்கிய தெழுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வந்த மக்களின் கலாச்சாரங்களையும்,பழக்க வழக்கங்களையும் நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார் திரு.கி.ராஜநாராயணன்.

மக்களின் நம்பிக்கைகளையும்,தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் கலாச்சாரத்தையும் புதிய வரவுகளான டார்ச் லைட்,மண்ணெண்ணை,தேயிலை தூள்,புகை வண்டி, இதுபோன்ற புதிய வரவுகள் எவ்வாறு மாற்றி அமைத்தன என்பதை கதையின் ஊடே நகைசுவையோடு நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்வார்.நாவலில் பல கதாபாத்திரங்கள் நம்மை பாதிப்பினும் குறிப்பாக கிட்டன்,அச்சிந்த்தலு மற்றும் காரி என்கின்ற கோயில் மாடும். கிட்டன்,அச்சிந்த்தலு சந்தித்து கொள்கின்ற கடைசி அத்தியாயம் கொஞ்சம் மிகைபடுத்தப்பட்டதாக உள்ளது,இருப்பினும் வருடங்களாகி போன பிரிதலுக்கு பின் சந்திக்கின்ற காதலர்களுக்கு கண்ணிர் துளி கூட அமிர்தமே, பின்பு ஏன் கிட்டனின் தாகத்தினை அச்சிந்த்தலுவின் உமிழ்நீர் தீர்க்காது?

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கோயில் மாடு என்பது அனேக கிராமங்களில் சர்வ சாதரணம்,விவசாய நிலங்கலில் கோயில் மாடு மேய்கின்ற போது அதை விரட்ட திராணியற்று, பின்பு வீட்டல் வந்து அதை நான் தான் விரட்டி விட்டேன் என்று பெருமையாக கூறுவது உண்டு,ஆனால் இன்றைய நிலை கோயில் மாடு என்பது அரிதாகி போன ஒரு சொல்லாகி விட்டது.யாரெனும் நேந்துவிட்டாலும் அதை விற்று காசு பண்ணுகின்ற நிலைக்கு கோயில் நிர்வாகமும் மற்றும் புதிய மருத்துவ வரத்துக்களாலும் கோயில் மாடுகளின் தேவையென்பது மக்களுக்கு அவசியமில்லை என்ற நிலையும் வந்தாகிவிட்டது.கடவுளின் பெயரால் மக்களின் நலன் சார்ந்த விசயங்கலாக எவ்வாறு மக்களின் கலாச்சாரத்தோடு இணைந்து பின்பு புதிய வரவுகளின் தாக்கத்தினால் அது தன் நிலையை மாற்றி கொள்கிறது என்பதை காரி உணர்தி செல்கிறது. சரி கடைசியா காரியை மனசுல வச்சு ஒரு கவிதை வ(க)டித்துள்ளேன் அதையும் கொஞ்சம் படிச்சிடுங்க.
-------------------------------------------------------------------
வருடத்திற்குகொருமுறை வர்ணம்
பூசிகொள்ளும் ஊர் ஒரத்து
அய்யனாருக்கு அருகில்.

கலவில்லா கருத்தரிப்பு எங்கள்
மந்தையில் மரபு விதையை
மறுத்துவிட்டது .

தொழுவத்தில் தினிக்கப்பட்டு ஈன்று
நுகர்ந்து ஏற்றாகிவிட்டது தாய்மை
தீண்டல் அன்றி.

புதிய வரவுகளின் புரிதலாய்
வேண்டாமாகி போனது
செவலை அய்யனாருக்கு.

அடுத்த முறை வேண்டிகொள்வோம்
அதோடு போகட்டுமென்று.
------------------------------------------------------------------

மீண்டும் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' இரண்டாம் பாகத்தோடு.
(இதை சொல்றத்துக்கே ரூம் போட்டு யோசிக்கனும் போல்ருக்கு,எப்படிதான் டெய்லி எழுதுறாங்களோ இடுக்கையிலே!)

திங்கள், டிசம்பர் 14

The untouchable country -யாகவா தொடர வேண்டும் என் பாரத தேசம்?


எத்தனயோ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சாதி எதிர்ப்பு இன்றும் அதன் தொடக்க நிலையில் தான் இருந்துகொண்டுருக்கின்றது,சமய சான்றோர்(வெகு குறைவு) மற்றும் பகுத்தறிவுவாதிகள் தொடங்கிய இந்த எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள் மட்டுமே காலம் காலமாக முன்னின்று இதனை ஒரு சமூக பிரச்சனையென்றும், தனிமனித சுயமரியாதையென்றும் கூறிவருகிறார்கள்.உண்ண உணவு,உடுத்த உடை, இருக்க இடம் என்ற நிலையிலிருந்து சுயமரியாதை வாழ்வும் என்கின்ற நிலைக்கு மாறி வெகு நாட்களாகின்றன.வளர்ந்து வருகின்ற பொருளாதர சூழ்நிலையில் தனி மனிதன் உணவு,இடம்,உடை இவையாவனவும் பெற்றுவிடமுடியும் என்ற நிலையிருந்தும் தான் பிறப்பால் இழிவுபடுத்தபடுகின்றோம்,சமூக கட்டமைப்பிலிருந்து ஒதுக்கபடுகின்றோம் என்ற நிலைவரும்போது எந்த எல்லைக்கும் சென்று பெற்றுக்கொள்ள முழு சுதந்திரம் உள்ளது,அதை தடுக்கவோ,எதிர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை.ஆனால் இந்த சாதி எதிர்ப்பு எங்கிருந்து தொடங்கபட வேண்டுமோ அங்கிருந்து தொடங்கப்படவில்லை.


பெருவாரியான இந்துக்கள் இந்த இழிநிலை விரும்பவில்லை மற்றும் அதிலிருந்து விடுபட தாங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்கின்றபோது அதை சரி செய்ய வேண்டிய பொருப்பு முழுமையாக இந்துக்களின் காவலன் என்றும்,சமய சான்றோர் என்றும்,பெருபான்மை இன மக்களுக்கு அரசியல் ஒற்றுமை மற்றும் ஆட்சி அதிகாரம் பெற்றுகொடுக்க போகின்றோம் என்று கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகளும் இதனை முழுபலத்தோடு எதிர்க்கவில்லை என்கின்றபோது என்னை போன்றவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கின்றது.இதைத்தான் இவர்கள் வருங்கால சந்ததியருக்கு கொண்டுபோக போகின்றார்களா? சிறு,சிறு வெவ்வேறான கலாச்சாரம் மற்றும் மொழி சார்ந்த இன குழுக்கலாக தனி தன்மையோடு வாழ்ந்து வந்த மக்களை இந்துக்கள் என்று அடையாளபடுத்தி,ஒருமுகபடுத்தி தமக்கென்று பழமையான கலாச்சாரம் உண்டென்றும்,அப்பனுக்கும்,குப்பனுக்கும் போர் நடைபெற்றபொழுது அருளப்பட்டது என்று கூறி எங்கள் கலாச்சாரத்துடன் ஒத்துபோகதை தினித்து இதுவும் நம் கலாச்சாரம் என்றார்கள் சரி ஏற்றுகொள்வோம் ஆனால் சுயமரியாதையுடனும் நாகரிகமாகவும் வாழ முயலும் மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்களை தொடர செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?.



வீடியோ:கீற்று வலைதளம் மற்றும் தலித் மீடியா நெட்வொர்க்,சென்னை.


எங்கெல்லாம் இந்த வன்கொடுமை அரங்கேற்றபடுகிறதோ அங்கு மேல்சாதி என்று கூறிகொள்ளும் நபர்களால்தான் இது அரங்கேற்றபடுகிறது.தெரிந்தே விட்டுசெல்கின்றனர் தங்களின் சந்ததிக்கு இந்த சாதி பிரிவினையை.எத்தனை சட்டங்களும்,பெரியார் மற்றும் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் தோன்றி ஒரே சமுக கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டு சாதி என்ற சொல்லை பயன்படுத்தி தான் உயர்ந்தவன் என்று சக மனிதனை இழிவுபடுத்துகின்ற வன்செயல் கூடாது என்றாலும் இவர்கள் மனம் மாற்றம் என்பது சற்று கடினம் என்றே கருததோன்றுகிறது.ஒவ்வொறு மதங்களும் தன் மக்கள் சிறப்பான சுயமரியாதை வாழ்வை வாழ அனுமதிக்கின்றன மற்றும் போதிக்கின்றன,ஆனால் இங்கு நாத்திகவாதிகளும்,பகுத்தறிவுவாதிகளும் மட்டுமே ஒங்கி குரல்கொடுக்கின்றனர்,இந்த நிலை மாறி சமயம் சார்ந்த கடும் எதிர்ப்பு குரலாக மாறும்பட்சத்தில் எங்கும் சமமான மாற்றம் ஏற்படும் என்றே கருதுகின்றேன்.


நாம் வேறுபட்டு நின்று இழப்பதற்கு பல காரணங்கள் உண்டாகலாம்,ஆனால் ஒன்றுபட்டு நிலைத்துநிற்க ஒரு காரணம் மாத்திரமே இருக்கும்.