சனி, ஜனவரி 9

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் I - என் பார்வை.

சாகித்திய அக்காடெமி விருது பெற்ற திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.கிராமத்து மக்களின் பேச்சு வழக்கிலேயே நாவல் முழுவதும் எழுதி முடித்திருப்பார்.விஜய நகர பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து தமிழக பகுதிகளில் குடியேறி வசிக்க தொடங்கிய தெழுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வந்த மக்களின் கலாச்சாரங்களையும்,பழக்க வழக்கங்களையும் நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார் திரு.கி.ராஜநாராயணன்.

மக்களின் நம்பிக்கைகளையும்,தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் கலாச்சாரத்தையும் புதிய வரவுகளான டார்ச் லைட்,மண்ணெண்ணை,தேயிலை தூள்,புகை வண்டி, இதுபோன்ற புதிய வரவுகள் எவ்வாறு மாற்றி அமைத்தன என்பதை கதையின் ஊடே நகைசுவையோடு நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்வார்.நாவலில் பல கதாபாத்திரங்கள் நம்மை பாதிப்பினும் குறிப்பாக கிட்டன்,அச்சிந்த்தலு மற்றும் காரி என்கின்ற கோயில் மாடும். கிட்டன்,அச்சிந்த்தலு சந்தித்து கொள்கின்ற கடைசி அத்தியாயம் கொஞ்சம் மிகைபடுத்தப்பட்டதாக உள்ளது,இருப்பினும் வருடங்களாகி போன பிரிதலுக்கு பின் சந்திக்கின்ற காதலர்களுக்கு கண்ணிர் துளி கூட அமிர்தமே, பின்பு ஏன் கிட்டனின் தாகத்தினை அச்சிந்த்தலுவின் உமிழ்நீர் தீர்க்காது?

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கோயில் மாடு என்பது அனேக கிராமங்களில் சர்வ சாதரணம்,விவசாய நிலங்கலில் கோயில் மாடு மேய்கின்ற போது அதை விரட்ட திராணியற்று, பின்பு வீட்டல் வந்து அதை நான் தான் விரட்டி விட்டேன் என்று பெருமையாக கூறுவது உண்டு,ஆனால் இன்றைய நிலை கோயில் மாடு என்பது அரிதாகி போன ஒரு சொல்லாகி விட்டது.யாரெனும் நேந்துவிட்டாலும் அதை விற்று காசு பண்ணுகின்ற நிலைக்கு கோயில் நிர்வாகமும் மற்றும் புதிய மருத்துவ வரத்துக்களாலும் கோயில் மாடுகளின் தேவையென்பது மக்களுக்கு அவசியமில்லை என்ற நிலையும் வந்தாகிவிட்டது.கடவுளின் பெயரால் மக்களின் நலன் சார்ந்த விசயங்கலாக எவ்வாறு மக்களின் கலாச்சாரத்தோடு இணைந்து பின்பு புதிய வரவுகளின் தாக்கத்தினால் அது தன் நிலையை மாற்றி கொள்கிறது என்பதை காரி உணர்தி செல்கிறது. சரி கடைசியா காரியை மனசுல வச்சு ஒரு கவிதை வ(க)டித்துள்ளேன் அதையும் கொஞ்சம் படிச்சிடுங்க.
-------------------------------------------------------------------
வருடத்திற்குகொருமுறை வர்ணம்
பூசிகொள்ளும் ஊர் ஒரத்து
அய்யனாருக்கு அருகில்.

கலவில்லா கருத்தரிப்பு எங்கள்
மந்தையில் மரபு விதையை
மறுத்துவிட்டது .

தொழுவத்தில் தினிக்கப்பட்டு ஈன்று
நுகர்ந்து ஏற்றாகிவிட்டது தாய்மை
தீண்டல் அன்றி.

புதிய வரவுகளின் புரிதலாய்
வேண்டாமாகி போனது
செவலை அய்யனாருக்கு.

அடுத்த முறை வேண்டிகொள்வோம்
அதோடு போகட்டுமென்று.
------------------------------------------------------------------

மீண்டும் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' இரண்டாம் பாகத்தோடு.
(இதை சொல்றத்துக்கே ரூம் போட்டு யோசிக்கனும் போல்ருக்கு,எப்படிதான் டெய்லி எழுதுறாங்களோ இடுக்கையிலே!)

2 comments:

vasu balaji சொன்னது…

எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரின் மிகப் பிடித்த புத்தகம். உங்கள் விமரிசனம் நன்று.

aambalsamkannan சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா, தாங்களை போன்றோரின் விமர்சனங்கள் என்னை போல் புதியவர்களுக்கு உற்சாகத்தை ஊக்கத்தையும் கொடுக்கும் என்று நம்புகின்றேன்.

கருத்துரையிடுக