வியாழன், ஜூலை 1

வாட்டாக்குடி இரணியனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு; ஜெயா தொலைகாட்சியின் 'கிரைம் டைரி'

அன்றைய பிரிக்கபடாத மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுகோட்டைக்கு அருகில் வடசேரி என்ற இடத்தில் காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே 5தேதியில் சுட்டு கொல்லப்பட்ட வாட்டாக்குடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் இவர்களை பற்றிய ஒரு சிறு தகவலாக ஜெயா தொலைகாட்சில் 'கிரைம் டைரி' என்ற நிகழ்ச்சியில் தொகுத்திருந்தனர்.இந்த பகுதியில் விவசாய தொழில் சார்ந்த மக்களை வாழையடி வாழையாக அடக்கி ஒடுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பண்னையார்களுக்கு எதிராக கொதித்தெழுந்து ஒத்த கருத்துடைய இளைஞர்களை பொதுவுடைமை என்ற உயர்ந்த தத்துவத்தின் கீழ் ஒருமுகபடுத்தி, போரடிய வாட்டாக்குடி இரணியன் என்ற மாவீரனை அதிகார மையம் வஞ்சகமாக 1950 மே 5 ல் சுட்டுக்கொன்றனர். வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான் ஓடை சிவராமன், இவர்களோடு இணைந்து போரடிய மற்ற தோழர்கள் பொதுவுடைமை இயக்க உயர்மட்ட குழு எடுத்த முடிவான மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து போரடி ஒடுக்கபட்ட மக்களுக்கு சுயமரியாதை வாழ்வை பெற்று தருவதென என்று எடுத்த முடிவால், அதிகார மையத்திடம் சரணடைந்த இளைஞர்கள் கடுமையான சிறைதண்டனைக்கு பிறகு வெளிவந்து தாங்கள் கொண்ட கொள்கையின் பிடிப்பால் மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு,நில சீர்திருத்த முறை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போரடி மாற்றத்தினை கண்டு இன்று வாழ்கையின் கடைசி கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரின் அனுபவத்தோடு ஜெயா தொலைகாட்சியில் அவ்வை மீடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர்.இது போல் நிகழ்சிகளுக்கு நேரம் வழங்கிய ஜெயா தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஒளி காட்சியை காண இங்கே சொடுக்கவும்.

சுதந்திர இந்தியாவில் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வினை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு சுயமரியாதை வாழ்வினை பெற்று தருவதற்காக போரடி இறந்த இவர்கள் ஏற்படுத்திய மாற்றம்,இப்பகுதியின் இன்றைய மக்களின் சுயமரியாதை வாழ்க்கையின் அடிநாதம் என்றே குறிப்பிடலாம்.வாட்டாக்குடி இரணியனின் நெருங்கிய சகாக்களில் எனது தந்தையும் ஒருவர் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன்.(நிகழ்சியின் க‌டைசியில் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.முருகையன்)

ஞாயிறு, ஜூன் 13

தலைமுறை கடந்த ஆம்பலாபட்டு சின்னங்கள்.

ஒவ்வொரு கிராமங்களும் தங்களுக்கென தனிதன்மையான கலாச்சாரம்,காலம் கடந்து நிற்கும் வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என பல சிறப்புகளை கொண்டுள்ளன.மண்வாசனை மாறாத என் கிராமத்து சில சிறப்புகளை இணையத்தில் இணைத்திட ஒரு வாய்பாக கருதி இதை பதித்துள்ளேன்.




தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் நினைவு தூண் (குடிக்காடு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

சனி, ஜூன் 5

கனவுகளின் தொழிற்கூடம்...

வெளிநாட்டு வேலை என்பது ஒவ்வொறு நடுதர இந்திய இளைஞர்களின் கனவு.இந்த கனவுகள் வெவ்வேறு வடிவங்களில் நிறவேற்றிகொள்ளபடுகிறது.படித்த இளைஞர்கள் தங்களின் தகுதியின் அடிப்படையில் அவர்களாகவே வேலை தேடிகொள்வதும்,சிலர் தங்களின் உறவுகள்,நண்பர்கள் மூலம் நிறவேற்றிகொள்வதும்,மற்றும் பலர் சென்னை போன்ற பெரும்நகரங்களில் இயங்குகின்ற வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த
இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனங்களில் கனிசமான தொகை கட்டி அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டும் உள்ளனர்.



சமீபத்தில் நான் சென்னையில் தங்கியிருந்த போது வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனத்தில் கன்சல்டண்டாக பணிபுரியும் எனது நண்பர் மூலம் இங்கு என்ன மாதிரியான பணிகளுக்கு இளைஞர்களை உருவாக்கி அனுப்புகின்றனர் என்று
நேரடியாக காண முடிந்தது.



அனேகமாக இந்த மாதிரியான நிருவங்களில் வெளிநாடுகளில் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பம்,கருவிகள் மூலம் பயிற்றுவிக்கபடுகின்றனர்.தேர்ந்ததெடுக்கபடுகின்ற இளைஞர்களும் தொழில் கல்வி படித்தவர்களாகவே இருக்கின்றனர்.இந்த இளைஞர்களை நிருவனத்தின் மூலம் நியமிக்கபடுகின்ற ஏஜென்டுகள் இளைஞர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அனுகி நம்பிக்கையை ஏற்படுத்தி ஆட்கள் சேர்கின்றனர்.ஏஜென்டுகளுக்கும் கனிசமான தொகை கமிசனாகவும் கொடுக்கபடுகிறது.



குறிப்பாக தஞ்சை,புதுகோட்டை,அறியலூர்,பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் சேருவதாக நண்பர் குறிப்பிடுகிறார்.இதுபோன்ற நிருவனங்கள் சென்னையில் அதிக அளவில் இருப்பதாகவும் ஆனால் வெளிநாடுகளில் அங்கிகாரம் பெற்ற நிறுவனங்கள் மிக குறைவு எனவும் குறிப்பிடுகிறார்.



இங்கு அதிக அளவில் கட்டுமான தொழில் சார்ந்த செய்முறை விளக்கங்களும்,உயர் கல்வி படித்தவர்களை கொண்டு கட்டிட வேலைகள் குறித்த விதிகளையும்,அதில் எவ்வாறு தேர்ச்சியுடன் செய்வது மற்றும் பாதுகாப்பு விதிகளை எளிய முறையில் விளக்கி பயிற்றுவிக்கின்றனர்.



ஒவ்வொறு இளைஞனின் கண்களிலும் கற்றுகொள்ள துடிக்கின்ற ஆர்வம், வாழ்கையில் முன்னேற காட்டுகின்ற வேகம் இவையாவும் எனக்கு புதிய உற்சாகத்தை அள்ளி தந்த அனுபவமாய் எனது பயணம்.

வியாழன், மே 13

'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சிகள்.


படத்தினை க்ளிக் செய்து 'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சியை காணலாம்.

புதன், மே 12

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் III

அருள்வாக்கு,ஆசி வழங்குவது என்பன மட்டுமென்றி இதுபோல் பல பகுத்தறிவுக்கு எட்டாத சடங்குகள் மக்களின் வாழ்கைமுறையோடு ஒட்டி தவிர்க்க முடியாத சடங்குகளாக மாறிவிட்டன. பல வேத நூல்களை படித்து அதை முழுமையாக கிரகித்துகொண்டு மக்களின் வாழ்கை முறைக்கு தேவையான கருத்துகளை மட்டும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்துகின்ற பெரியோர்களை நமது முன்னோர்கள் மதித்து,போற்றினர். ஆனால் இன்றைய நிலை என்பது வேறு, ஆன்மிக சொற்பொழிவு செய்கிறவர்களையே நாம் கடவுளுக்கு இணையான நிலையினை கொடுக்க முயற்சிக்கிறோம்.அதன் பலன் நாம் தினந்தோறும் செய்திதாள்களிலும்,தொலைகாட்சிகளிலும் காண்கின்றோம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்து மத ஆன்மீகவாதிகளும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சமம் ஏனெனில் பொருளாதரதிலும் ஆகட்டும்,புகழில் ஆகட்டும் இவர்களே முன்னனி.


எனக்கு தெரிந்தவரை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் வேத நூல்களை படித்து தெரிவாகி அதில் மக்களுக்கு தேவையான கருத்துகளையோ,ஆன்மிக சொற்பழிவோ,திறமையான மேஜிக்கோ செய்வதாக தெரியவில்லை.சராசரி நடுதர மக்களின் தேவையான கடவுள் பெயர் சார்ந்த ஆறுதல் இவைகளை ஏதோ ஒரு வடிவில் அவர்களின் தேவைகளை அறிந்து வெளிபடுத்துவதினாலும் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் போன்றோரின் வளர்ச்சி அதீதமாகபடுகின்றது.






ஆம்பலாபட்டு கிராம அரசியல் என்பது 1996-க்கு முற்பகுதிவரை முழுமையாக கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் மட்டும் கோழோச்சி கொண்டிருந்தனர்.பிறகு ஏற்பட்டு சில மாறுதல்கள் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களை ஆம்பலாபட்டு வடக்கில் ஏற்படுகின்ற மாறுதல்களை வேடிக்கை பார்கிறவர்களாக மட்டுமே ஏற்படுத்திவிட்டது.இதனால் சில விமரிசனதிர்க்கு உட்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன.இதில் அதீதமாக ஆன்மீகம் சார்ந்த மாறுதல் ஆகும்.ஆம்பலாபட்டு கிராமவாசிகள் சிரியவர் முதல் பெரியோர்வரை எல்லா விசயங்களையும் விமர்சிக்ககூடிய ஆற்றயுடையவர்,இந்த ஆற்றலை ஏற்படுத்திய பெறுமை பொதுவுடமை இயக்கத்தவர்களை சாரும்.


சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற தனிபட்ட மனிதரின் வாழ்கையில் ஏற்பட்ட மாறுதல் வேண்டுமெனில் அவரை மிக சிறந்த மனிதனாக மாற்றி இருக்கலாம்.அதன் பலன் பாழடைந்த சிவன் கோயில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு புதிப்பிக்கபடுகிறது,சில இளைஞர்கள் நல்லதொரு வழிகாட்டளுடன் ஆன்மிக பணி என்றொரு நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையை விமரிசனம் செய்வது என் நோகம் அல்ல இருப்பினும் இதுபோல் தன் பரிவாரங்களுடன்
செயல்பட ஆரம்பித்த ஆன்மீகசெயல்கள் தான் இன்று மடாலயங்கள்,ஆதினங்கள் என்று கூறிகொண்டு மூடபலக்கவழக்கங்களையும்,சாதிய கொடுமைகளையும் தாங்கிகொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்கின்றன, மக்கள் தன்நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கையையும் அதன் மூலம் வருகின்ற செயல்களை தன் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற பெறும்மாற்றமாக கருதி வாழ்கின்றனர்.ஆகவே அவர்கள் அந்த நம்பிக்கைய கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழ சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரனின் செயல் ஊக்கமாக இருக்குமாயின் அதுவே அவரின் சிறப்பான ஆன்மீக பணியாக காலம் அவரை வாழ்த்தும், இவை தவிர்த்து உரையாடலிலும்,உருவத்திலும் தன்னை மாற்றிகொள்வதன் மூலம் ஆதின முறைக்கு மாறுகின்ற ஒரு வழியாக
கருத வேண்டியதில்லை.
 
 

முற்றும்.
-------------------------------------