வெள்ளி, ஏப்ரல் 23

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் II

இனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ?' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.


வருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது? வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(?) பேச்சாற்றலா?



நினைவுகள் தொடரும்...

0 comments:

கருத்துரையிடுக