புதன், ஏப்ரல் 14

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் I

அனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்து!படர்ந்த! ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம்! என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.

பொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.





இன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

மல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு (?) பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.

சரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.



நினைவுகள் தொடரும்...

1 comments:

Dinesh senathipathi சொன்னது…

Senathipathi in native ambalapattu endrum...enga ayya solla arinthu konden.,manthai veeranar kovil kumbapisekam nadantha pothu kalanthu konden... Nandri

கருத்துரையிடுக