ஞாயிறு, ஜூன் 13

தலைமுறை கடந்த ஆம்பலாபட்டு சின்னங்கள்.

ஒவ்வொரு கிராமங்களும் தங்களுக்கென தனிதன்மையான கலாச்சாரம்,காலம் கடந்து நிற்கும் வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என பல சிறப்புகளை கொண்டுள்ளன.மண்வாசனை மாறாத என் கிராமத்து சில சிறப்புகளை இணையத்தில் இணைத்திட ஒரு வாய்பாக கருதி இதை பதித்துள்ளேன்.




தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் நினைவு தூண் (குடிக்காடு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

சனி, ஜூன் 5

கனவுகளின் தொழிற்கூடம்...

வெளிநாட்டு வேலை என்பது ஒவ்வொறு நடுதர இந்திய இளைஞர்களின் கனவு.இந்த கனவுகள் வெவ்வேறு வடிவங்களில் நிறவேற்றிகொள்ளபடுகிறது.படித்த இளைஞர்கள் தங்களின் தகுதியின் அடிப்படையில் அவர்களாகவே வேலை தேடிகொள்வதும்,சிலர் தங்களின் உறவுகள்,நண்பர்கள் மூலம் நிறவேற்றிகொள்வதும்,மற்றும் பலர் சென்னை போன்ற பெரும்நகரங்களில் இயங்குகின்ற வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த
இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனங்களில் கனிசமான தொகை கட்டி அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டும் உள்ளனர்.



சமீபத்தில் நான் சென்னையில் தங்கியிருந்த போது வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனத்தில் கன்சல்டண்டாக பணிபுரியும் எனது நண்பர் மூலம் இங்கு என்ன மாதிரியான பணிகளுக்கு இளைஞர்களை உருவாக்கி அனுப்புகின்றனர் என்று
நேரடியாக காண முடிந்தது.



அனேகமாக இந்த மாதிரியான நிருவங்களில் வெளிநாடுகளில் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பம்,கருவிகள் மூலம் பயிற்றுவிக்கபடுகின்றனர்.தேர்ந்ததெடுக்கபடுகின்ற இளைஞர்களும் தொழில் கல்வி படித்தவர்களாகவே இருக்கின்றனர்.இந்த இளைஞர்களை நிருவனத்தின் மூலம் நியமிக்கபடுகின்ற ஏஜென்டுகள் இளைஞர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அனுகி நம்பிக்கையை ஏற்படுத்தி ஆட்கள் சேர்கின்றனர்.ஏஜென்டுகளுக்கும் கனிசமான தொகை கமிசனாகவும் கொடுக்கபடுகிறது.



குறிப்பாக தஞ்சை,புதுகோட்டை,அறியலூர்,பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் சேருவதாக நண்பர் குறிப்பிடுகிறார்.இதுபோன்ற நிருவனங்கள் சென்னையில் அதிக அளவில் இருப்பதாகவும் ஆனால் வெளிநாடுகளில் அங்கிகாரம் பெற்ற நிறுவனங்கள் மிக குறைவு எனவும் குறிப்பிடுகிறார்.



இங்கு அதிக அளவில் கட்டுமான தொழில் சார்ந்த செய்முறை விளக்கங்களும்,உயர் கல்வி படித்தவர்களை கொண்டு கட்டிட வேலைகள் குறித்த விதிகளையும்,அதில் எவ்வாறு தேர்ச்சியுடன் செய்வது மற்றும் பாதுகாப்பு விதிகளை எளிய முறையில் விளக்கி பயிற்றுவிக்கின்றனர்.



ஒவ்வொறு இளைஞனின் கண்களிலும் கற்றுகொள்ள துடிக்கின்ற ஆர்வம், வாழ்கையில் முன்னேற காட்டுகின்ற வேகம் இவையாவும் எனக்கு புதிய உற்சாகத்தை அள்ளி தந்த அனுபவமாய் எனது பயணம்.