புதன், ஜூன் 4

ஆம்பல் தியாகி S.A.முருகையன் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.




அரசியலின் மார்பில் நீர் எழுதியது

அடக்குமுறைக்கு எதிரான அறவழி.

தீண்டாமையின் திரைகளைச் சிதைத்தீர்,

தீக்கதிராய் சமத்துவம் விதைத்தீர்.


வென்றதில்லை ஆயுதம் உங்கள் கரங்களில்,

வெற்றியாய்த் திகழ்ந்தது உங்கள் வார்த்தைகள்.

உயிர் நீங்கினும், உயிர்களில் நீங்காத

உரிமைக்குரல் நீங்கள் என்றும்!


இன்று உங்கள் பாதையில் பலர் நடக்கிறார்கள்,

இணைமையாய் உங்கள் நினைவை ஏந்தி.

மண்ணும், மக்கள் மனமும் மறக்காது,

முருகையன் என்ற பெயர் ஒளியாய் வாழும் 🙏


தோழர்.சிவஞானம். 

ஆம்பலாபட்டு, கண்டியர்தெரு.

0 comments:

கருத்துரையிடுக