திங்கள், பிப்ரவரி 8

இறையாண்மை மிக்க நாடா இலங்கை?

பரவலாக எல்லோரலும் எதிர்பார்க்கபட்ட நிகழ்வு தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது.ராஜபக்கியை எப்போது எதிர்க்க தொடங்கினாறோ அன்றே நடைபெற வேண்டியது காலம் தாழ்ந்து நடைபெற்றுயுள்ளது.'என் மீது நடவடிக்கை எடுக்கபடுமானால் ரகசியங்களை வெளியிடுவேன்' என்று கூறிய மாஜி இராணுவ தளபதி தற்பொது தர,தரவென இழுத்துசெல்லப்பட்டு ரகசிய இடத்தில் விசாரனை என்று செய்திகள் வருகின்றன.என்ன மாதிரியான ரகசியமாக இருக்ககூடும்? இறுதி கட்ட போரில் எவ்வாறு மனித உரிமை மீறல் செய்தோம்,மனிதர்களை பல்வேறு விதமான சித்ரவதை செய்து கொன்றது ஹிட்லர் மட்டுமல்ல நாங்களும் தான், என்று மாஜி ராணுவ தளபதி மற்றும் எதிர்கட்சிகளின் அதிபர் வேட்பாளர் கூறுவரேனால் தனது முகதிரை கிழிக்கபட்டுவிடும் உலக அரங்கில் என்றா அரங்கேறியுள்ளது? இல்லை,,,






சிங்கள ஆதிக்க மனோபாண்மை வெளிபடுத்துகின்ற மற்றொரு நிகழ்வுதான் இது என்றே கருதுகின்றேன். இத்தனை நாள் உரிமை கேட்டு போரடிய தமிழனை அழித்தாகிவிட்டது,இனி நான் தான் இங்கே ஹிட்லர் எனவே மற்றொறு ஹிட்லர் தேவையில்லை என்று தன் பங்காளியை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை(?) செய்து கொண்டு இருக்கின்றார் ராஜபக்கி. இறுதிகட்ட போரில் 'மனித பேரழிவு செய்துகொண்டுள்ளது இலங்கை அரசு' என்று கத்தி,கதறிய தமிழக மக்களுக்கும்,அகதிகளாய் தனது அடையாளங்களை தொலைத்துவிட்டு நிற்கின்ற எனது உறவுகளுக்கும் கூறிய வார்த்தை 'இறையாண்மை மிக்க நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தவறு' என்று கூறி, இலங்கை அரசின் மனித பேரழிவினை தாய் தமிழகத்தின் மூலமாக உலக அரங்குக்கு எடுத்து செல்வதை தடுத்த இந்திய ஆட்சியாளர்கள் இன்று என்ன சொல்ல போகிறார்கள்?



0 comments:

கருத்துரையிடுக