![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizGlxyNCU3gdcNlSUHE0AUxkk6VCiCzTBUdy8m4V-HK6-fGug61_IeSjn5MreqvDd9awJzhdE2eD9XK-dM6hq7ux_OW4cte7G6t8XJCDJEINmg-8TY2IVwj6v79Os2hyphenhyphenfXX5nUMexX6r4/s320/women+eng.jpg)
கடந்த இரு தினங்களாக பஹ்ரைன் செய்திதாளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு நிகழ்வு. கேரள மாநிலத்தை சார்ந்த ஒரு யுவதி இந்திய தூதரகத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார், அதாவது, அதே மாநிலத்தை சார்ந்த ஒருவர் விசாவிர்க்கு நாற்பதாயிரம் பெற்றுகொண்டு, ஒட்டலில் சர்வர் வேலை மாதம் இருபதாயிரம் என்று சொல்லி இங்கு அழைத்து வந்திருக்கின்றார்.இங்கு வந்த பின்புதான் அந்த யுவதிக்கு தான் ஏமாற்றபட்டுள்ளோம் என்று தெரியவருகிறது, மட்டுமல்லாது வலுகட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தபட்டு இருக்கிறாள். இதிலிருந்து தப்பிக்க வேறு வழியறியாது இந்திய தூதரகத்தை அனுகி புகார் தெரிவித்து உள்ளார்.தூதரகமும் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அந்த கேரள நபரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfcFoKgJFYNJ1U2VrPW6SQCjWuiiiVM45wiOxfVcdJUTuywDu6ZXGNR30EZMl2pJz4F91ZTZhyphenhyphenZGovqdoXFTKhhQiJkvvB5fVgODvzwFINFmjbPIohgLYSFLcNiC-xyXrVSOJAQ0Qqy0o/s320/good.jpg)
படித்த இளைஞர்கள் சில நேரங்களில் கட்டிட வேலை மற்றும் க்லீனிங்க் வேலை செய்தாலும் என்றாவது ஒருநாள் தான் நினைத்ததை சாதிதுவிட முடிகின்றது, அல்லது தனது ஒப்பந்தம் முடிந்த பின்பு நாட்டிற்கு சென்று ஏதாவது செய்து கொள்ளமுடிகிறது(?).ஆனால் பெண்களின் சூழ்நிலை இவ்வாரக பெரும்பாலும் அமைவதில்லை.ஆகவே பெண்கள் வெளிநாட்டு வேலை என்று வரும்போது அனைத்துவிதமான வழிகளிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டிவருகிறது. ஏதோ ஒருவழியில் வெளிநாடு சென்றுவிட்டால் போதுமென்று இந்திய அதிகாரிகளையும்,சட்ட திட்டங்களையும் ஏமாற்றிவிட்டு வருகின்றவர்கள் இங்கு வந்த பின்பு ஏமாறுவது அவர்களாக கூட நேரலாம்.
2 comments:
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
"விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு."
எந்த ஒரு விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருந்தோனோ அது கிடைத்துள்ளது.
மிக்க நன்றி மேடம்.
கருத்துரையிடுக