திங்கள், ஏப்ரல் 11

ஜனசக்தி : யார் பிற்போக்கு? சோனியாவிற்க்கு பதிலடி!

கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்போக்கான கட்சி எனவும் எந்தத் துறையிலும் நவினமோ,முற்போக்கு சிந்தனையோ இல்லாத கட்சி என்றும் மிகக் கடுமையாக
சாடியிருக்கிறார் சோனியா.கேரளாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

சோனியா இத்தாலியில் குழந்தையாய் இருந்தகாலம்,பாசிசத்தின் இருள் அகற்ற கம்யூனிஸ்டுகள் பட்டபாட்டையும் டோக்ளியாட்டி போன்ற கம்யூனிஸ்ட் மேதைகள் ஆற்றிய பணிகளையும் அவர் அறிந்திருப்பாரா? இல்லையென்றால் படித்தறிவது நல்லது.

இதே சோனியாவை இத்தாலி நாட்டை சார்ந்தவர் வேறொரு நாட்டுகாரர் என வலதுசாரிகள் கூறியபோது,"அவர் இந்தியர்,இந்திய குடியுறிமை பெற்றவர்,
நாட்டை சொல்லி மனிதரை வேறுபடுத்திட கூடாது' என முழக்கமிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அது முற்போக்கா? பிற்போக்கா?

ஒரு சீக்கியர் செய்த தவறுக்காக பல ஆயிரம் சீக்கியரை கொன்ற காங்கிரஸ் செயல் முற்போக்கா? மாறாக,சீக்கியர்களை பாதுகாக்க பிரதமர் ராஜிவ் காந்தி
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும்,அத்தோடு அனைத்து மக்களும்,சீக்கிய மக்களோடு ஒருமைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும்
தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து பிற்போக்கா?

இலங்கை தமிழ் மக்களின் உரிமை போரை அடக்கி ஒடுக்க இந்திய அரசு செய்த உதவிகளை ஆதரித காங்கிரஸின் செயல் முற்போக்கா? இலங்கை தமிழ் மக்களின் உரிமையை பறிக்க கூடாதுதென முழக்கமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்கா?


நவீனம் பற்றி பேசுகிறார் சோனியா.இந்தியாவில் 5 ஆண்டு திட்டங்களே முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிலாய், பொக்காரோ, பக்ராநங்கள், கூடாங்குளம் என நாடு நவீனம் கான குறல் கொடுத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.

ராகேஷ் சர்மா,மல்ஹோத்ரா விண்வெளி ஆய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட தீர்மானம் இயற்றியது இந்திய கம்யூனிஸ் கட்சி.

ஆபதில்லாத மின் திட்டங்களை கோரி இன்றும் போரடும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

அதுபோல் மக்களின் பசி போக்கும் உணவு திட்டம்,100 நாள் வேலை திட்டம்,தகவல் அறியும் உரிமை சட்டம்,ஆரம்ப கல்வி திட்டம், கிராமபுற சுகாதர திட்டம், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு திட்டமென கம்யூனிஸ்டுகள் முழங்கிய முழக்கம் எல்லாம் ஆழ்ந்த பொருள் கொண்ட நவீனத்தின் அடையாளம் அன்றோ.
இதை அறியாமல் சோனியா முழங்குவது ஆணவமன்றோ!



நன்றி: மு.வீரபாண்டியன்

படம்: google image

0 comments:

கருத்துரையிடுக