வெள்ளி, மே 6

மே தின மற்றும் தியாகிகள் நினைவுநாள் பேரணி.

மே 1 உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைபாளிகளின் தினம் ஆம்பலாபட்டில் மே தின மற்றும் தியாகிகள் வாட்டாகுடி இரணியன்,ஆம்பல் ஆறுமுகம், ஜாம்பவான் ஒடை சிவராமன் இவர்களின் நினைவு தினமாகவும் மே 5-தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரணி தியாகி ஆறுமுகம் நினைவு தூணிலிருந்து S.A.முருகையன் அவர்கள் கொடி ஏற்றி டாக்டர்.வே.துரைமாணிக்கம் அவர்கள் தொடங்கி வைக்க பேரணி ஆம்பலாபட்டு,முள்ளூர்பட்டிகாடு,நெய்மேலி திப்பியக்டி,பாப்பநாடு,கரம்பயம் வழியாக பட்டுகோட்டையில் நடைபெற்ற தியாகிகள் நினைவுதின பொதுகூட்டதிற்க்கு சென்றடைந்தது.




பொதுகூட்டத்தில் பேசிய தோழர்களில் ஆம்பல் வீ.கல்யாணசுந்தரம்,பட்டுகோட்டை பக்கிரிசாமி,கரம்பயம் அரங்க.சின்னப்பா ஆகிறோர் மூன்று தியாகிகளின் தியாகங்களை இன்றை இளைய தலைமுறை புரிந்துகொள்ள கூடிய வகையில் சிறப்பாக எடுத்துறைதனர்.


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தா.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்
பேரணியை பார்வையிட்டு சிறப்புரை நிகழ்தினார்.தியாகிகளின் சிறப்புகளையும்,தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் அவருகே உரித்தான ஆக்ரோஷதுடன் தொடங்கி, தி.மு.க தலைவர் கலைஞர்.கருனாநிதியின் 2G நிலைபாடு மற்றும் ஈழத்தில் தமிழின படுகொலையில் அவரின் போலிநாடம் போன்ற விசயங்களை மிக சிறப்பாகவும், விரிவாகவும் பேசினார். செங்கமலத்தாங்காடு பி.ஆர்.நாதன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே பொது கூட்டம் சிறப்புடன் நிறைவு பெற்றது.

0 comments:

கருத்துரையிடுக