வெள்ளி, ஆகஸ்ட் 19

ஐ.நா அறிக்கையும் தமிழர் கடைமையும்.. த.தே.பொ.கயின் பொதுகூட்டம் பட்டுகோட்டை.

பட்டுகோட்டை காவல்துறையின் மிரட்டலோடு 13-08-2011 மாலை சரியாக 6 மணிக்கு தமிழ் ஈழ ஆதரவு பாடல்களோடு கூட்டம் தொடங்கியது.கூட்ட ஒருகிணைப்பு என்னவோ தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியாக இருப்பினும் கலந்துகொண்டது பெரும்பாண்மையாக தமிழ் ஈழ ஆதரவாளர்களே,காரணம் உணர்ச்சிபாவலர் திரு.காசி ஆனந்தனின் பங்கேற்ப்பு.


அடக்கி ஒருக்கபட்டு,இனஅழிப்பிற்க்கு ஆளாகிய சொல்லனா துயரங்களோடு, முள்வேலி முகாமுகளிலும், தனது சொந்த இருப்பிடங்களை சிங்கள இராணுவனுக்கு கொடுத்துவிட்டு அதன் அருகிலேயே நாடோடிகளை போல குடிசையில் வாழும் நமது தொப்புல்கொடி உறவுகளுக்கு நாம் ஏதேனும் உதவி செய்திட மாட்டோமா..?   என்ற ஏக்கமே கூடி இருந்த இளைஞர்களின் மனதில் காணமுடிந்தது. ஈழ போரில் கடைசி நாட்களில் நடைபெற்ற மனிதபேரழிவு தாய்தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் ஒடுக்கபட்டது.ஈழ போரின் இறுதி கட்டதில் போராளிகள் மட்டுமல்ல அப்பாவி பொது மக்களும்,குழந்தைகளும் கொல்லபடுகிறார்கள் மற்றும் இளம் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளோடு கொல்லபடுகிறார்கள் என ஈழ ஆதரவாளர்கள் கதறினார்கள்..கேட்டார்களா அன்றைய ஆட்சியாளர்கள்,விளைவு.. நம் கண்முன்னால் கானொலியாக வலைதளங்களிலும்,குறுங்தகடுகளிலும் காணுகிறோம், 60 ஆண்டுகால இனபடுகொலையின் உச்சகட்டமாக போரில் பொதுமக்களும்,குழந்தைகளும்,இளம்பெண்களும் மற்றும் போரளிகளும் மிக கொடுரமாக கொல்லபட்டனர்,அதன் அடிப்படையில் ராஜபக்கியை போர்குற்றவாளி என அறிவிக்க வேண்டுமென இடதுசாரிகளும் மற்றும் தமிழ்பற்றாளர்களும் குரல்கொடுக்கின்றனர்.




திரு.காசி ஆனந்தன் அவர்கள்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகளொடு போர் செய்கிறோம் என்றாய்,ஆனால் இன்று யாரோடு போர் செய்ய
எம் மண்ணில் இத்தனை சிங்கள காடையர்களை குவித்து வைத்துள்ளாய்..? என்று கேள்வி எழுப்புகிறார்.




ஈழ இன பிரச்சனையில் தீர்கமான அரசியல் முடிவெடுக்க முடியாமல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுரை அரங்கேறும் அரசியல் அதிகாரவர்கத்தின் விருபத்திற்க்குகேற்ப கையாளப்பட்ட இன பிரச்சனை இன்று தாய் தமிழர்களை வஞ்சித்து உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை கொண்டுவந்துவிட்டது
எனது இந்திய தேசம்..



இந்திய தேசமே ஒருமுறையாவுது உண்மை பேசு...
என் ஈழதமிழனை காக்க அல்ல..
உன் இறையாண்மையை காக்க..




0 comments:

கருத்துரையிடுக