புதன், செப்டம்பர் 30

வாழ்த்துக்கள்,தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு.

ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை நாளை 02.10.2009 தொடங்கபடுகின்றது என்று தோழர் கவிஞர்.செவ்வியன் (தலைவர் ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் சென்னை) மூலமாக அறியபொருகின்றேன்.நீண்ட காலத்திற்க்கு பிறகு இவ்வாறன நிகழ்சி நம் மண்ணில் நடைபெற இருக்கின்றது,என்னிடம் சில நண்பர்கள் எதிர்மறையான மற்றும் எப்பொழுதும் முன்வைக்கும் கருத்துக்களை தெரிவித்தார்கள்,அவர்களுக்கு ஒரே பதில் ஆம்பலாப்பட்டின் தலைமுறை மாற்றத்திற்க்கு முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு நாம் நம்முடைய ஆதரவினை கொடுப்போம் என்றேன்.

இருப்பினும் என்னுடைய கருத்துக்களை என் இடுகளம் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ளவிரும்பொகின்றேன்,இன்று நம்மை சுற்றியுள்ள கிராமங்களுக்குஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்கிகொண்டு இருக்கின்றோம், இம் மாற்றத்தினை ஏற்படுத்திய பொறுமை நம் முன்னோர்களையே சாரும் குறிப்பாக செஞ்சட்டை தோழர்களையே சாரும்.ஏனெனில் ஆம்பல் வரலாற்றில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்று கூறுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே இந்த அறக்கட்டளையை ஒருங்கினைத்தவர்களும்,நிதி அளிப்போர்களும் இயல்பாகவே வரவேற்றிறுப்பார்கள்.என்னைபோல நூற்றுகணக்கான இளைங்ஞர்கள் தரமற்ற கல்வி மற்றும் மொழி பிரச்சனைகளால் அவதிபடுகின்றோம்,நம் மண்ணை பொறுத்தவரை பொருள் தேடல் என்பது இடம்பெயர்ந்தது அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது.வசதிபடைத்தவர்கள் குடிபெயர்ந்தும்,நடுத்தர குடும்பங்கள் நர்சரி பள்ளிகளுக்கும் அனுப்பி போலியான வளர்ச்சிக்கு தயார்படுத்திகொள்கின்றனர். ஒரு சிறு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,நான் கடந்தமுறை விடுமுறையில் சென்றபோது கண்டது, விவசாய குடும்பம்,இரண்டுகுழந்தைகள்,ஆணொன்று,பெண்ணொன்று,தினமும் அதிகாலையில் எழுந்து நீரட செய்து,காலை சிற்றுண்டி மற்றும் அனைத்தும் செய்து காலை மணி 06.45 தயார்படுத்திடுவாள் நர்சரி பள்ளிக்கு அன்னை, ஆனால் பெண்ணோ அதுவாகவே தயார்படுத்திகொண்டு செல்லும் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு,இரண்டு குழந்தகளுக்கும் வயது வித்தியாசம் இரண்டுக்குள்தான் இருக்கும் என்று கருதுகிறேன்,நான் ஒரு நாள் அந்த அன்னையிடம் வினாவினேன் அதற்க்கு 'இவள் படித்து ஒன்றும் ஆகபோவதில்லை ஆனால் அவன் படித்தால் எங்காவது போய் எங்களை காப்பாற்றுவான்' என்று கூறி சென்றார்கள். இது நமது கிராமத்தில் மட்டுமல்ல பரவலாக காணபடுகின்ற சாதரண ஒரு நிகழ்வு. மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வு ஒரு சமூக பிரச்சனையாகவே கருதுகிறேன்.குழந்தை பருவத்திலேயே கற்ப்பிக்கபடுகிறது நீ இதற்க்கு தகுதியுடையவன், நீ இதற்க்கு மட்டும் தான் தகுதியுடையவள் என்று,

ஆலயங்கள் பல எழுப்பி அதில் தம் அடையாளங்களை பதித்தனர் நமது முன்னோர்கள்.இன்றும் அதைத்தான் செய்கின்றனர்,இதுவல்ல இன்றைய அவசியம்,விவசாயம் சார்ந்த உற்பத்தியினால் நிறைவு அடைந்தனர் நமது முன்னோர்கள்,ஆனால் இன்றைய நிலை பொருள் ஈட்டல் என்பது கிராமம் சார்ந்ததாக இல்லை,இடம்பெயர்ந்த அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது ஆகவே அதற்க்கு ஏற்றவாறு நமது இளைங்ஞனை தயார்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

ஒருமைக்கன் நான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.

வாழ்த்துக்களுடன்,

கண்ணன்.
பஹ்ரைன்.

0 comments:

கருத்துரையிடுக