புதன், ஜனவரி 20

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் II - என் பார்வை.

முதல் பாகம் முழுவதும் தமிழக பகுதிகளில் குடியேறி வசித்து வந்த தெழுங்கு பேசும் மக்களின் கலாச்சாரங்களை காதல்,நகைசுவை,என்று பல்சுவையோடு தருகின்ற திரு. கி.ராஜ நாரயணன் அவர்கள் தனது இரண்டாம் பாகத்தில்,முழுவதும் சுதந்திர போரட்டம் உச்ச கட்டத்திலிருந்து தொடங்கி சுதந்திரம் பெருகின்ற கடைசி நாள் வரை, நடைபெருகின்ற சம்பவங்களை அலசுகின்ற ஒரு அரசியல் நாவலாகத்தான் எழுதியுள்ளார் என்றே கருதுகின்றேன்.இந்திய தேசிய விடுதலை போரடத்தில்,காந்திய கொள்கைகலிருந்து மாறுபட்டு நின்று அதற்காக தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி கொண்டு போரடிய சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் போரட்டங்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.


இரண்டாம் உலக போருக்கு பின்பு,உலக அரசியலில் ஏற்பட்ட மாறுதலினால் தன் காலனி நாடுகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் ஏற்படுகின்ற பின்னடைவுகளாலும்,இந்திய தேசிய சுதந்திர போரட்டம் மொழி,இனம் மற்றும் எல்லை கடந்து இந்திய துணை கண்டம் முழுவதும் சாதரண குடிமகனையும் சுதந்திரம் தாகம் ஆட்கொள்வதாலும்,ஆங்கில அதிகார மையம் இனி இங்கு தொடருவதில் சிக்கல் என்றே நினைத்து மறுபரிசிலனை செய்திருக்கலாம்,நிலமை இவ்வாற இருக்க காங்கிரஸ் இயக்கம் மட்டுமே இந்திய தேசிய விடுதலை போரட்டத்தினை, முழுவதுமாக தன் வசமாக்கி அதை காலம் காலமாக சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க கொள்ள முயல்கிறது,வெற்றியும் பெற்று வருகின்றது.மட்டுமல்லாது ஒரு குடும்பத்திற்காகவே இந்திய நாட்டின் உச்ச அதிகார மையம் காத்திருப்பது போலவும்,அதற்காக ஒவ்வொறு தலைமுறையிலும் ஒரு தலைவன் உருவாக்கபடுவதும் ஆச்சரியபடவைக்கிறது. பிரிட்டிஷ் இந்திய சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு சுதந்திர இந்தியாவின் அதிகாரம் மையம் மாற்றபடும்போது அதை மூன்றாக பிரித்து தலா காங்கிரஸ் 40%,முஸ்ஸிம் லீக் 40% மற்றும் மற்ற கட்சிகளுக்கு (கம்யூனிஸ்ட் ? ) 20% என்று பிரித்து தருமாறு கேட்பதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்,இதிலிருந்து அறிய முடிகிறது காங்கிரஸ் மட்டுமே இந்திய சுதந்திர விடுதலை போரட்டத்தினை தன் வசமாக்கியுள்ளது.இடதுசாரி சிந்தனைகளோடு இந்திய விடுதலை போரட்டத்தில் பங்குகொண்ட எத்தனை தலைவர்களை வரலாறு நமக்கு சொல்லிகொடுத்துள்ளது,நில சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்கள் அடையாளமாக திகழ்ந்த காங்கிரஸ் இயக்கம் இன்றும் வேறுவடிவில் அதைதான் பின்பற்றுகிறது.ஆனால் ஆரம்பம்முதல் அடிதட்டு மக்களின் தோழனாக நின்று அவர்களோடு இணைந்து போரடிய காங்கிரஸ் அல்லாத இயக்கத்தவர்களை எத்தனை பேருக்கு இன்று தெரியும்?.


அகிம்சா வழியில் போரடமல் மாற்று சிந்தனைகளோடு சுதந்திரத்திற்கு போரடி ஆங்கில அதிகாரத்திடம் மண்டியிட மறுத்து உயிர் துறந்த போது அவர்களுக்கு எழுகின்ற மக்கள் ஆதரவினை எவ்வாறு தமக்கு சாதகமாக மாற்றிகொண்டனர் என்று கதாபாத்திரங்கள் வழியே நமக்கு உணர்துகின்றார் ஆசிரியர்.உதரணமாக பெஷாவர் கூர்க்கா படை,கப்பற் படை வீரர்களின் எழுச்சி மற்றும் பகத் சிங் போன்றோர்களை குறிப்பிடலாம்.


இரண்டாம் உலக போரில் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவம்,பிரிட்டனுக்கு எதிரான அணிகளோடு இணைந்து இந்திய விடுதலைக்கு வெளியிலிருந்து போரடும் போது ஜெர்மனுக்கு ஆதரவான நிலை நம் மக்களிடம் தோன்றியதையும்,பின்பு அதே ஜெர்மன் மக்கள் சர்வாதிகார அரசிடம்(சோவித் ரஷ்யா) மல்லுக்கு நின்றபோது வெறுக்கின்றதை சுட்டி காட்டியுள்ளார் ஆசிரியர்.இந்த நிலை ரஷ்யாவின் எழுச்சி உலக அடிதட்டு மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதில் மாச்சரியம்யில்லை.



இருதியாக, ஆசிரியர் தன் கடைசியாக பக்கத்தில் இவ்வாறக குறிப்பிடுகின்றார்...



''பாபுஜி,தேசத்துக்கு சுதந்திரம் வந்துவிட்டது.தேசமே மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறது.நீங்கள் மெளனமாக நூல் நூற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு செய்தி சொல்லவேண்டும்''. என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டு நின்றார்கள்.


பதிலே சொல்லலையாம்;அவர்பாட்டுக்கு ''விர் விர்" என்று நூல் நூற்றுகொண்டுருந்தாராம்.திரும்பவும் பத்திரிகை நிருபர்கள் அதே கேள்வியை காந்திஜியிடம் கேட்டார்களாம்.


ராட்டை சுற்றுவதை நிறுத்தினாராம்.நிருபர்களை பார்த்தாராம்.என்னசொல்லுவாரோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிருபர்களுக்கும் தேசத்துக்கும் அவர் சொன்ன ஒரே வார்த்தை:


"ஒண்ணுமில்லை"


சொல்லிவிட்டு முன்னிலும் வேகமாக நூற்கஆரம்பித்துவிட்டாராம்.சுதந்திரத்தைப்பற்றி கல்கத்தாவில் காந்திஜி சொன்ன வார்த்தை கோபல்ல புரத்திலும் வந்து எதிரொலித்தது.

"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"


அன்னமய்யா அந்த வார்த்தையை தனக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.

-------

எந்த ஒரு படைப்பும் படைபாளிகளின் கருத்துக்களில் மேல் மட்டும் நின்றுவிடாமல்,வாசிப்பாளனிடம் மாறுபட்ட சிந்தனையை ஏற்படுத்துகின்றதோ அது ஒரு சிறந்த படைப்பு என்ற அடிப்படையில் திரு.கி.ராஜ நாரயணன் அவர்களின் நாவல் வாயிலாக என் கருத்துக்களை பதித்துள்ளேன்.வாய்ப்பிருப்பின் வாங்கி படியுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக