திங்கள், ஏப்ரல் 28

ஒரு கல்லின் கதை. பாகம் 02 - என்னை மறந்து விடாதீர்கள்


மாந்தனும் ஒந்திரனும் கல்லை மெய்ம்மறந்து பார்த்தனர். பாசி படர்ந்த மேற்பரப்பில், மங்கலாகத் தெரிந்த சித்திரங்கள் அவர்களை ஈர்த்தன. ஒரு பெண்ணின் உருவம், ஒரு கையில் மலர்களுடனும் மற்றொரு கையில் வேலுடனும் மரங்களுக்கு நடுவே நிற்பது போல செதுக்கப்பட்டிருந்தது. "இது... யாரோ ஒரு அம்மனைப் போல இருக்குடா," ஓந்திரன் மெல்ல முணுமுணுத்தான்.

மாந்தன் மெதுவாகக் கல்லைத் தொட்டான். அந்தக் கணம், அவனுக்கு ரு மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான். கண்களை மூடிய நிலையில், ஒரு பெண்ணின் குரல் மென்மையான, ஆனால் ஆழமானஅவன் மனதில் ஒலித்தது. "என்னை மறந்துவிடாதீர்கள்..." என்று அது முணுமுணுத்து மறைந்தது. மாந்தன் திடுக்கிட்டு கண்களைத் திறந்தான்.



"டேய், என்னடா ஆச்சு?" ஒந்திரன் பதறினான்.

"எனக்கு... ஒரு குரல் கேட்டது, . இந்தக் கல்... இது சாதாரணமில்லை." மாந்திரனின் குரலில் பயமும் ஆர்வமும் கலந்திருந்தன.

அவர்கள் கல்லைச் சுற்றி ஆராய்ந்தபோது, தரையில் உதிர்ந்த இலைகளுக்கு அடியில், பழைய மண்பாண்டத் துண்டுகள் தென்பட்டன. ஒரு துண்டில், இதே பெண் உருவம் வரையப்பட்டிருந்தது. "இது யாரோ வழிபட்ட இடமாக இருக்குமோ?" மாந்தன் யோசித்தான்.

திடீரென, காற்றில் ஒரு மாற்றம். மரங்களுக்கு நடுவே, ஒரு மெல்லிய புகை மூட்டம் பரவியது. அவர்களைச் சுற்றி, நிழல்கள் அசைவது போல உணர்ந்தார்கள். "மாந்தா... இங்க இருக்கிறது சரியில்லை. வா, கிளம்புவோம்!" ஒந்திரன் அவசரப்படுத்தினான்.

ஆனால், மாந்தனின் கண்கள் கல்லை விட்டு நகரவில்லை. "இல்லை, ஒந்திரா. இந்த இடத்துக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கு. நாம இதை கிராமத்துக்கு சொல்லணும்."

அவர்கள் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, காடு அவர்களை விடுவதாக இல்லை. ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு நிழலும் அவர்களைப் பின்தொடர்வது போல உணர்ந்தார்கள். கிராமத்தை அடைந்தபோது, அவர்களின் உடைகள் முட்களால் கிழிந்து, முகத்தில் பயத்தின் நிழல் படிந்திருந்தது.

"நாம பார்த்தது சாதாரண கல்லு இல்லை, ஓந்திரா," மாந்தன் மெல்லச் சொன்னான். "அது... ஒரு அம்மன்." அந்த இரவு, கிராமத்தில் ஒரு புதிய கதை பிறந்தது. கருங்காட்டில், மறக்கப்பட்ட ஒரு தெய்வம் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியது, புதிய பெயரோடு.

 

(தொடரும்...)

0 comments:

கருத்துரையிடுக